என் மலர்
நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் லீக்"
- இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
- இப்போட்டியில் பி.எஸ்.ஜி அணி 5 கோல்கள் அடித்து அசத்தியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பி.எஸ்.ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கொல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 - 0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இதய UEFA சாம்பியன்ஸ் லீக் நடைபெறுகிறது.
- இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் போடோ/கிளிம்ட் அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது.
- 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
- அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.
பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.
- 2 லெக்கிலும் சேர்த்து ஆர்சனல் ரியல் மாட்ரிட்டை 5-1 என பந்தாடியது.
- பார்சிலோனா 5-3 என டார்ட்மன்-ஐ வீழ்த்தியது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் 2ஆவது லெக் ஆட்டங்கள் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடைபெற்றன.
ஒரு காலிறுதியின் 2ஆவது லெக்கில் ரியல் மாட்ரிட்- ஆர்சனல் அணிகள் மோதின. முதல் லெக்கில் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் அணி 4 கோல் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரியல் மாட்ரிட் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சனல் அபாரமாக விளையாடி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் இரண்டு லெக்கிலும் சேர்த்து 5-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி 2ஆவது லெக்கில் இன்டர் மிலான்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என சமநிலை பெற்றது. முதல் லெக்கில் இன்டர் மிலான் 2-1 என வெற்றி பெற்றதால் மொத்தமாக 4-3 என வெற்றி பெற்றது.
4ஆவது காலிறுதியில் ஆஸ்டன் வில்லா- பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா 3-2 என வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் முதல் லெக்கில் பிஎஸ்ஜி 3-1 என வெற்றி பெற்றிருந்ததால் மொத்தமாக 5-4 என பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.

4ஆவது காலிறுதியில் பார்சிலோனா- டார்ட்மன்ட் அணிகள் மோதின. இதில் டார்ட்மன்ட் 3-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றிருந்ததால் பார்சிலோனா 5-3 என வெற்றி பெற்றது.
மே 1ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் முதல் லெக்கில் பிஎஸ்ஜி- ஆர்சனல், பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. 2ஆவது லெக் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
- மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.
- இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
- 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.
இஸ்தான்புல்:
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.
அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.
இன்று நடைபெற்ற முதல் லெக் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெய்மர், கவானி இல்லாமல் பி.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேரத்தில் பி.எஸ்.ஜி. வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 53-வது நிமிடத்தில் அந்த அணியின் ப்ரெஸ்னெல் கிம்பெம்பே முதல் கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் கிலியான் மப்பே ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு மான்செஸ்டர் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.

ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஓஸ்மானே டெம்பேல் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா முதல்பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்தான் லூகாஸ் மவுரா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
பார்சிலோனா நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டோட்டன்ஹாம், இன்டர் மிலன் அணிகள் 6 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி, டிரா, தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றது. கோல் அடித்தது, கோல் விட்டுக் கொடுத்ததிலும் சமமாக இருந்தது. அவர்களுக்கிடையிலான ஆட்டத்தை கணக்கிட்டு டோட்டன்ஹாம் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.

அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.
இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.






