search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UEFA"

    முறைகேடு செய்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என்று லா லிகா லீக்கின் தலைவர் பிஎஸ்ஜி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PSG #Laliga
    கால்பந்து கிளப் அணிகளில் ஸ்பெனில் உள்ள பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அதேபோல் பிரான்ஸில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பணக்கார கிளப்பாக திகழ்ந்து வருகிறது.

    பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த நெய்மரை பிஎஸ்ஜி 222 மில்லியன் யூரோவிற்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத தொகைக்கு வாங்கியது. அத்துடன் மட்டுமல்லாம் மொனாக்கோ அணியில் விளையாடிய கிலியான் மப்பேவை 180 மில்லியன் யூரோவிற்கு வாங்கியது.



    இது கால்பந்து சங்கங்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்மர் டிரான்ஸ்பரில் பிஎஸ்ஜி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    இதற்கிடையே பிஎஸ்ஜி அணி குறித்த விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லா லிகா தலைவர் சேவியர் டெபாஸிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கேட்டுக்கொண்டது. ஆனார், சேவியர் டெபாஸ் அந்த கோரிக்கையை நிராகரித்து ‘‘முறைகேடு செய்தால் நீக்கப்படுவீர்கள்’’ என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் குரோசியாவை 6-0 என துவம்சம் செய்தது ஸ்பெயின். #uefanationsleague
    ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பு சார்பில் புதிதாக நேஷன்ஸ் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நவம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது. இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் முன்னணி வகிக்கும் அணிகள் 2020 யூரோ கோப்பைக்கு தகுதிபெறும். ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பில் உள்ள 55 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு உட்பிரிவுகள் உள்ளன..



    முன்னணி அணிகள் லீக் ‘ஏ’-வில் இடம்பிடித்துள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குரூப் ஏ4-ல் இடம்பிடித்துள்ள உலகக்கோப்பையில் 2-ம் இடம் பிடித்த குரோசியா- ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 6-0 என குரோசியாவை துவம்சம் செய்தது.
    சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் கூடுதல் நேரத்தில் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #UEFA
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்து நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.



    இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    ×