என் மலர்
நீங்கள் தேடியது "Arsenal"
- 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
- அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.
பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.
- 2 லெக்கிலும் சேர்த்து ஆர்சனல் ரியல் மாட்ரிட்டை 5-1 என பந்தாடியது.
- பார்சிலோனா 5-3 என டார்ட்மன்-ஐ வீழ்த்தியது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் 2ஆவது லெக் ஆட்டங்கள் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடைபெற்றன.
ஒரு காலிறுதியின் 2ஆவது லெக்கில் ரியல் மாட்ரிட்- ஆர்சனல் அணிகள் மோதின. முதல் லெக்கில் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் அணி 4 கோல் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரியல் மாட்ரிட் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சனல் அபாரமாக விளையாடி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் இரண்டு லெக்கிலும் சேர்த்து 5-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி 2ஆவது லெக்கில் இன்டர் மிலான்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என சமநிலை பெற்றது. முதல் லெக்கில் இன்டர் மிலான் 2-1 என வெற்றி பெற்றதால் மொத்தமாக 4-3 என வெற்றி பெற்றது.
4ஆவது காலிறுதியில் ஆஸ்டன் வில்லா- பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா 3-2 என வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் முதல் லெக்கில் பிஎஸ்ஜி 3-1 என வெற்றி பெற்றிருந்ததால் மொத்தமாக 5-4 என பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.

4ஆவது காலிறுதியில் பார்சிலோனா- டார்ட்மன்ட் அணிகள் மோதின. இதில் டார்ட்மன்ட் 3-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றிருந்ததால் பார்சிலோனா 5-3 என வெற்றி பெற்றது.
மே 1ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் முதல் லெக்கில் பிஎஸ்ஜி- ஆர்சனல், பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. 2ஆவது லெக் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
- மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன.
- ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக். இந்த லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சனல்- பிரெனட்போர்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன. ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளை டிரா செய்துள்ளது. 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 36 புள்ளிகள் பெற்றுள்ளது.
லிவர்பூல் 18 போட்டிகளில் 14 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி மூலம் 45 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பிரான்ட்போர்டு 18 போட்டிகளில் 7-ல் வெற்றி, 3-ல் டிரா, 8-ல் தோல்வி மூலம் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலியன் ஏ லீக் போட்டியில் மெக்ஆர்தர் எஃப்சி 3-2 என வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலீஷ் லீன் ஒன் தொடரில் இன்று 11 போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இஸ்ரே் பிரீமியர் லீக்கில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
வேல்ஷ் பிரீமியர் லீக்கில் இரணடு போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.

இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.
மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டோபர் கோல் அடித்தார்.
அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் பென்பிகாவையும், செல்சி இன்டர் மிலனையும் பெனால்டி சூட்டில் வீழ்த்தியது.
இதுகுறித்து அர்சென் வெங்கர் கூறுகையில் ‘‘எனது வாழ்க்கையில் நான் இந்தியா செல்வதை தவற விட்டுவிட்டதும் ஒன்று. நான் இந்தியா செல்வ ஆர்வாக இருக்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை அங்கு சென்றதில்லை.
நான் எப்போதுமே அர்செனல் அணி இந்தியா சென்று விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இதற்கான வாய்ப்பு நெருங்கி வந்தது. ஆனால் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அங்குள்ள சமூகம் மாறுபட்டது. அங்குள்ள தத்துவம் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்செனே வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சென் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார்.

இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.
கடந்த சீசனில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அர்சேன் வெங்கர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அர்செனல் கிளப் அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது. இந்த சீசனிலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகிறது. இதனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த சீசனோடு அர்செனல் பயிற்சியளார் பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.






