search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் வாழ்க்கையில் இந்தியா செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்- அர்சென் வெங்கர்
    X

    என் வாழ்க்கையில் இந்தியா செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்- அர்சென் வெங்கர்

    என் வாழ்க்கையில் இந்தியா செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் என்று பிரீமியர் லீக் கால்பந்து அணியான அர்செனலின் பயிற்சியாளர் அர்சென் வெங்கர் கூறியுள்ளார்.
    அர்செனலின் 22 வருடகால பயிற்சியாளர் வாழ்க்கை முடிவுக்கு வருவதையொட்டி, அர்சென் வெங்கர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்தியாவை மிகவும் தவற விடுவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அர்சென் வெங்கர் கூறுகையில் ‘‘எனது வாழ்க்கையில் நான் இந்தியா செல்வதை தவற விட்டுவிட்டதும் ஒன்று. நான் இந்தியா செல்வ ஆர்வாக இருக்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை அங்கு சென்றதில்லை.

    நான் எப்போதுமே அர்செனல் அணி இந்தியா சென்று விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இதற்கான வாய்ப்பு நெருங்கி வந்தது. ஆனால் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அங்குள்ள சமூகம் மாறுபட்டது. அங்குள்ள தத்துவம் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்செனே வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சென் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார்.



    இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.

    கடந்த சீசனில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அர்சேன் வெங்கர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அர்செனல் கிளப் அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது. இந்த சீசனிலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகிறது. இதனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த சீசனோடு அர்செனல் பயிற்சியளார் பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
    Next Story
    ×