search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manchester United"

    யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். #ManUnited #EPL
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தவரிசையில் 6-வது இடம்பிடித்து யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.

    இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.



    முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
    2018-19 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு அறிவிக்கப்படும் பிரிமீயர் லீக் கால்பந்து அணியில் பால் போக்போவிற்கு இடம் கிடைத்துள்ளது. #PremierLeague
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு நடைபெறும் உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். இதில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உள்பட பல முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.

    பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
    மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். #ManchesterUnited
    போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோஸ் மவுரினோ கடந்த 2016-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த சில மாதங்களாக இவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரருமான பால் போக்பா ஆகியோருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது.

    இதற்கிடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயரை தற்காலிக பயிற்சியாளராக நியமித்துள்ளது.


    சோல்ஸ்க்ஜயர்

    ஜோஸ் மவுரினோ 2004 முதல் 2007 வரை செல்சி அணியிலும், 2008 முதல் 2010 வரை இன்டர் மிலன் அணியிலும் 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியிலும், 2013 முதல் 2015 வரை செல்சி அணியிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ கோல் அடித்த நிலையிலும், ஓன் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என யுவான்டஸை வீழ்த்தியது. #Ronaldo
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யுவான்டஸ் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. யுவான்டஸ் அணியில் இடம்பிடித்து விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

    புகழைத் தேடிக்கொடுத்த அணிக்கெதிராக ரொனால்டோ களம் இறங்கியதால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சொந்த மைதானத்தில் விளையாடியதால் யுவான்டஸ் வீரர்கள் கூடுதல் பலத்துடன் விளையாடினார்கள்.

    ஆனாலும் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் வரை மான்செஸ்டர் யுனைடெட் பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் யுவான்டஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபட்டது.



    86-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜுயன் மட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 89-வது நிமிடத்தில் யுவான்டஸ் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ ஓன் கோல் அடிக்க பரபரப்பான கட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

    ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள யுவான்டஸ் 4 போட்டியில் மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 4 போட்டியில் இரண்டில் வெற்றி, தலா ஒரு தோல்வி, டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    ரொனால்டோவுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் படையெடுத்தனர். ஆனால் ஒருவருக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. #Ronaldo
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைனெட் அணியும், இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் கிரிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது. #EPL #ManUtd #LFC
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிரைட்டன் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-2 வீழ்த்தி பிரைட்டன் அதிர்ச்சி அளித்தது.

    ஆட்டத்தின் 25-வது மற்றம் 27-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தது பிரைட்டன். அதன்பின் 34-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூகாகு ஒரு கோல் அடித்தார். என்றாலும் பிரைட்டன் அணி 44-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரைட்டன் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்பா கோல் அடித்தார். இதனால் பிரைட்டன் 3-2 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.



    நேற்றி நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜேம்ஸ் மில்னர் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 93-வது நிமிடத்தில் (இன்ஜூரி நேரம்) சேடியோ மானே கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர், லிவர்பூல் அணிகள் தாங்கள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2018-19 சீசன் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #EPL
    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் 2018-19 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பால் போக்பா முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 83-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூக் ஷா மற்றொரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் 90 நிமிடம் வரை லெய்செஸ்டர் சிட்டி அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் வார்டி ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.



    மற்றொரு ஆட்டத்தில் செல்சி - ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிகள் மோதின. இதில் செல்சி 3-0 என வெற்றி பெற்றது. கான்டே 34-வது நிமிடத்திலும், ஜார்ஜினோ (பெனால்டி) 45-வது நிமிடத்திலும், பெட்ரோ 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    முன்னணி அணிகளான மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது.
    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக சம்பளம் வாங்காமல் இலவசமாக விளையாட விரும்பியதாக ஸ்லாடன் இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார். #MUFC
    ஸ்வீடன் நாட்டின் கால்பந்து பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச். 36 வயதாகும் இவருக்கு ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான ஸ்வீடன் அணியில் இடம் கிடைக்கவில்லை. தலைசிறந்த ஸ்ட்ரைக்கரான இவர் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி 122 போட்டிகளில் 113 கோல் அடித்துள்ளார்.

    2016-ம் ஆண்டு மான்செஸ்டர் அணிக்கு மாறினார். 2018 வரை மான்செஸ்டர் அணிக்காக 33 போட்டிகளில் விளையாடி 17 கோல் அடித்தார். இவரை அடிக்கடி காயம் துன்புறுத்தியதால் பெரும்பாலான நேரங்களில் ஓய்வில்தான் இருந்தார். இதனால் மான்செஸ்டர் அணி அவரை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தற்போது அமெரிக்கா சென்று லா கிளாக்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட விரும்பியது குறித்து இப்ராஹிமோவிச் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் மான்செஸ்டர் அணிக்காக விளையாட விரும்பினேன். அதற்காக சம்பளம் கூட வாங்க விரும்பவில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.



    2016-ம் ஆண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் மான்செஸ்டர் அணிக்கு மாறினார். 35 வயதான இவரை 2016-17 சீசனுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2017-18 சீசனிலும் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    சுவீடன் அணிக்காக 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை 116 போட்டிகளில் விளையாடி 62 கோல் அடித்துள்ளார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்காக டோட்டன்ஹாம், செல்சி உள்பட ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #Ronaldo #RealMadrid #PSG
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 33 வயதாகும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறது. ரியல் மாட்ரிட் அணி கடந்த மூன்று வருடமாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல இவர்தான் முக்கிய காரணம்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே விளையாட்டில் அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது. இந்த சம்பளத்திலும் நீடிக்கிறது. தற்போது ரொனால்டோவை விட மெஸ்சி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரை விட கூடுதல் சம்பளம் வாங்க ரொனால்டோ விரும்புகிறார். ஆனால் 33 வயதாகிவிட்டால் ரியல் மாட்ரிட் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க யோசிக்கிறது.



    இந்நிலையில் அவர் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லலாம் என்ற கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே டோட்டன்ஹாம், செல்சி அணிகளும் அவரை இழுக்க முயற்சி செய்கிறது. இதற்கிடையே பணக்கார கிளப்பான பிஎஸ்ஜி மற்றும் பேயர்ன் முனிச் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மட்டுமே செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது ரொனால்டோவின் வாரச் சம்பளம் 3 லட்சத்து 65 ஆயிரம் பவுண்டு எனக்கூறப்படுகிறது. ஆனால் மெஸ்சியின் சம்பளம் 5 லட்சம் பவுண்டு எனக்கூறப்படுகிறது.
    போர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வின்படி 4.12 பில்லியன் டாலருடன் மான்செஸ்டர் யுனைடெட் முதல் இடம் பிடித்துள்ளது. #MUFC #RealMadrid
    கால்பந்து கிளப் அணிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேபோல் யுவான்டஸ், பேயர்ன் முனிச் அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    போர்ப் பத்திரிகை கால்பந்து கிளப் அணிகளில் எது மதிப்புமிக்க அணி என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் 4.12 பில்லியன் கோடியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய பணமதிப்பில் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாகும். கடந்த 2016-17 சீசனை விட 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரியல் மாட்ரிட் 4.08 பில்லியன் டாலருடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 4.06 பில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும் உள்ளது.



    முதல் 10 இடங்களை பிடித்துள்ள அணிகள் விவரம்:-

    1. மான்செஸ்டர் யுனைடெட் (4.12 பில்லியன் டாலர்)
    2. ரியல் மாட்ரிட் (4.08 பில்லியன் டாலர்)
    3. பார்சிலோனா (4.06 பில்லியன் டாலர்)
    4. பேயர்ன் முனிச் (3.06 பில்லியன் டாலர்)
    5. மான்செஸ்டர் சிட்டி (2.47 பில்லியன் டாலர்)
    6. அர்செனல் (2.23 பில்லியன் டாலர்)
    7. செல்சியா (2.06 பில்லியன் டாலர்)
    8. லிவர்பூல் (1.94 பில்லியன் டாலர்)
    9. யுவான்டஸ் (1.47 பில்லியன் டாலர்)
    10. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (1.23 பில்லியன் டாலர்)
    எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup

    லண்டன்:

    2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் ஒரு பகுதியான எப்.ஏ. கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செல்சி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 22-வது நிமிடத்தில் செல்சி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை செல்சி அணி சரியாக பயன்படுத்தி கொண்டது.



    பெனால்டி வாய்ப்பில் செல்சி அணி வீரர் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் இறுதி நிமிட ஆட்டம் வரை இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி கோப்பையை கைப்பற்றியது. செல்சி அணி எப்.ஏ.கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும். #ChelseaFC #ManchesterUnited #FACup
    ×