என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Newspaper"

    • ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
    • காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.

    ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.

    சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.

    1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
    • அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    சென்னை:

    நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.

    அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.

    நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.

    மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனநாயகத்தின் 4- வது தூணான பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமை
    • உலகில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் உலக மக்களை இணைக்கும் மிகப் பெரும் பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் செயல்படுகிறது.

    பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் பத்திரிகை, ஊடகங்கள் மிருந்த வளர்ச்சி அடைந்து வருகின்றன.இதன் மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாகி உள்ளது



    இந்நிலையில் உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று (மே -3 ந்தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உருவான வரலாறு குறித்த தகவல் வருமாறு :-

    கொலம்பியா நாட்டின் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா 1986 -ம் ஆண்டு டிசம்பர் 17 - ந்தேதி அவரது அலுவலகம் முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு பின்னர் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. 




    இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 -ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3- ந் தேதி பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.

    2016 -ல் 133 வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசை, 2022- ம் ஆண்டில், 150 -வது இடத்திற்கு சரிந்துள்ளது .




    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    தற்போது வரை சில பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. 




    ஜனநாயகத்தின் 4- வது தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமை ஆகும். பத்திரிகை சுதந்திர தினமான இன்று உலகில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

    • சூரப்பள்ளம் ஊர்ப்புற நூலகத்தில் பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன.
    • தீயில் எரிந்த நூல்களின் மொத்த மதிப்பு 5000 ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர்.

    பட்டுக்கோட்டை

    பட்டுக்கோட்டையை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள, ஊர்ப்புற நூலகம் என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நூலகம் உள்ளது. அதன் பொறுப்பாளராக மூன்றாம் நிலை நூலகர் ஜெயந்தி (வயது 43) பணியாற்றுகிறார்.

    இந்த சூரப்பள்ளம் ஊர்ப்புற நூலகத்தில் பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி நூலகத்தை மூடிவிட்டு நூலக ஊழியர்கள் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது விஷமிகள் யாரோ வேண்டுமென்றே தீயிட்டுக் கொளுத்தியது போல் இருந்தது.

    அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கருகிக் கிடந்ததை பார்த்த ஜெயந்தி, ஊர்மக்கள் துணையுடன் தீயை அணைத்தனர். தீயில் எரிந்த நூல்களின் மொத்த மதிப்பு 5000 ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து நூலகத்தின் பொறுப்பாளர் ஜெயந்தி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×