என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்தி நாளிதழ்கள்"

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
    • அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    சென்னை:

    நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.

    அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.

    நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.

    மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து டிரம்ப் போட்ட ட்வீட்டுக்கு எதிர்வினையாக, அங்குள்ள 350 செய்தி நாளிதழ்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டியுள்ளன. #Trump #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் அவ்வப்போது ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையை தெரிவிப்பார். அந்த ஊடகம் மற்றும் அந்த செய்தியை எழுதிய செய்தியாளரை திட்டி தீர்த்த பின்னர்தான் அவர் அமைதி அடைவார்.

    இந்நிலையில், நேற்று காலை அவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி நாளிதழ்கள், காட்சி ஊடகங்களை குறிப்பிட்டு பொய் செய்தி ஊடகம் என ட்வீட் செய்திருந்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் இத்தகைய ஊடகங்கள் அமெரிக்காவுக்கே தீங்கு எனவும் அவர் ட்வீட் செய்தார்.



    இதற்கு, அமெரிக்க ஊடகங்கள் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளன. அங்குள்ள சுமார் 350-க்கும் மேலான செய்தி நாளிதழ்கள் இன்று டிரம்ப்பை விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளன. 

    அதிபரின் அறிக்கைகள், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும், செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளன. ‘மற்றவர்களுக்கான பேச்சுரிமை இருப்பதே சிறந்த அமெரிக்கா’ என பாஸ்டன் குளோம் நாளிதழ் கூறியுள்ளது.

    நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், ‘செய்தியாளர்களும் மனிதர்களே, அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தனக்கு எதிரான செய்தி வந்தால் பொய் என்பதும், செய்தியாளர்களை தாக்குவதும் எந்த வகையான ஜனநாயகம்’ என கூறப்பட்டுள்ளது.
    ×