என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Government"

    • தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
    • தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் கடந்த 15ம் தேதி அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    சம்பவத்தன்று தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    மேலும், தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இறந்தன.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை 17ஆக உயர்ந்துள்ளது.

    • தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.
    • துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மா. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2023 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்ல தீப்தி முக்கியப் பங்காற்றினார்.

    இந்நிலையில் தீப்தி சர்மாவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு கவுரவம் செய்துள்ளது. தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு, 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இதன்மூலம் தீப்தி சர்மாவின் சிறுவயது கனவு நனவாகியது. உத்தரபிரதேசத்தில் அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது. இந்த பதவிக்காக உத்தரபிரதேச அரசுக்கு தீப்தி நன்றி கூறினார். மேலும் இதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.

    உத்தரபிரதேசத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. #UPGovernment
    லக்னோ:

    பொருளாதாரரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. கடந்த 14-ந் தேதி முதல், இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இதே முடிவை எடுத்துள்ளன.#UPGovernment
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தரமான மது விற்கப்படும் என சட்டசபையில் மந்திரி இன்று தெரிவித்தார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முஹம்மது பயீம் இர்பான் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. அமான் மானி திரிபாதி ஆகியோர் மதுவிலக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் பதில் அளித்தார்.

    மதுவிலக்கு என்பது இந்த மாநில அரசின் கொள்கை. ஆனால், மாநில அரசின் வருமானத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள், பீர் அல்லது நாட்டு மது வகைகளின் விற்பனையை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

    அப்படி மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளத்தனமான மது விற்பனை பெருகிவிடும். இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடும். மது வகைகளின் மீதான ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மதுவை விற்பதில் மாநில அரசு அக்கறை செலுத்தும் என்று ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் குறிப்பிட்டார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    ராமரின் அவதார பூமியான அயோத்தி நகரில் தீபாவளி திருநாளன்று 3 லட்சம் தீபங்களை ஏற்றி உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளது. #AyodhyaDiwali #Guinnessrecord
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமஜென்ம பூமியான அயோத்தி நகரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தீபங்களை ஏற்றி, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கடந்த ஆண்டு தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    அதேவகையில், இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையையொட்டி  3 லட்சம் தீபங்களை ஏற்றி  உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தீபாவளியன்று சரயு நதிக்கரையில் 300 அடி உயரம் கொண்ட ராமரின் சிலை நிறுவப்படும். 3 நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளி விழாவில் கடந்த ஆண்டைப்போலவே கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். #AyodhyaDiwali #Guinnessrecord
    வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. #Vajpayee #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

    டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் வீட்டில் இருந்து உடல் தகனம் நடந்த இடம் வரை 7 கி,மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள், முதல்- மந்திரிகள், தலைவர்கள் நடந்து சென்றனர்.

    சரியாக 4.14 மணி அளவில் இறுதிச்சடங்கு தொடங்கியது. 5.05 மணிக்கு வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா தீ மூட்டினார். முழு அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.


    வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

    மேலும் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் புனித நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது. ஆக்ராவில் யமுனையிலும், அலகாபாத், கான்பூர், வாரணாசி, கோரக்பூர், காக்ரா, பைசாபாத், அசம் கார், ஆகிய இடங்களில் கங்கையிலும், லக்னோ, அமேதியில் கோமதி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    ஆக்ராவில் பதேஸ்வர் என்ற இடம்தான் வாஜ்பாயின் பூர்வீகம். கான்பூரில் கல்விகற்றார். பலராம்பூர் அவர் முதன்முதலில் தேர்தலில் நின்றார். லக்னோவில் அவர் 5 முறை எம்.பி.யானார் என்பதால் இந்த 4 இடங்களில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் வாஜ்பாய் பிறந்த குவாலியரிலும் நினைவிடம் கட்டப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.  #Vajpayee #AtalBihariVajpayee
    ×