search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "media"

    • 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
    • அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

    இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.

    "2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.

    சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாட்டுதாவணியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊடகங்கள் வாயிலாக பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகள், பிரதமர் மோடி தென் தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் யூடிப் மூலம் செய்திகள் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய பணி புரிய வேண்டும் என்றார்.

    இதில் தென் தமிழகம் வளர்ச்சி பெற மதுரை நத்தம் சாலையில் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், மதுரை 9-வது வார்டு உத்தங்குடியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஊடகத்துறையில் மகளிர் பங்களிப்பு எனும் தலைப்பில் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
    • ஊடகத்துறையில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு தொடர்பான பாடப்பிரிவில் பயின்ற மகளிர் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் ஊடகங்களில் மகளிரின் பங்களிப்பு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச கருத்தரங்கம், நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடக்கும் இந்த கருத்தரங்கில், அதே கல்லூரியில் பயின்று வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் பங்கேற்கிறார்கள். ஊடகத்துறையில் மகளிரின் பங்களிப்பு மாற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது நாவடக்கம் தேவை. ஒரேயொரு தவறான கருத்து எல்லா காரியங்களையும் பாழடித்து விடும் என பாஜக புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும்  நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும்.

    குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக வரிசையாக அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.



    சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தே தீரவேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளது. பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிகளில் முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விலகி இருங்கள்.

    இதை நீங்கள் தவிர்த்தால் ஏராளமான பிரச்சனைகளையும் நீங்கள் தவிர்த்து விடலாம். நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தும் பலனில்லை என்னும் அளவுக்கு தவறான ஒரேயொரு கருத்து அவை அத்தனையையும் பாழாக்கி விடும்’ என வலியுறுத்தினார்.
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

    அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில பகுதிகளில் இந்து அமைப்பினரால் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

    சில செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஒருதரப்பினர் தாக்கி வாகனங்களுக்குள் சிறைபிடித்து வைத்ததாக செய்திகள் வெளியாகின.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.

    இதற்கிடையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்க நிறுவனங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

    இதைதொடர்ந்து, பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வந்தால் சன்னதியை மூடுவோம் என மேல்சாந்திகள் எச்சரித்துள்ளனர். பம்பா மற்றும் நிலக்கல் பகுதி வழியாக வரும் வாகனங்களை நேற்றிலிருந்து போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

    சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சபரிமலை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஐயப்பன் கோவிலின் அன்றாட விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது. வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt 
    ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். #AircelMaxisCase #CBI #Chidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் சில விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

    அவரது மனுவில், சிபிஐ குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்புவதாகவும், நீதி விசாரணையை விடுத்து ஊடகங்கள் மூலம் வெற்றி பெற சிபிஐ நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

    ப.சிதம்பரத்தின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கு குறித்து அக்டோபர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AircelMaxisCase #CBI #Chidambaram
    ×