பெங்களூரு போக்குவரத்து நெரிசல்: வளாக சாலையை திறக்க சித்தராமையா கடிதம்- மறுப்பு தெரிவித்த விப்ரோ நிறுவனர்

பெங்களூரு வெளிப்புற ரிங் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.விப்ரோ வளாக சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கடிதம்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல்: வளாக சாலையை திறக்க சித்தராமையா கடிதம்- மறுப்பு தெரிவித்த விப்ரோ நிறுவனர்
Published on

பெங்களூருவின் வெளிப்புற ரிங் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு சில கி.மீ. தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதற்கு கர்நாடக அரசு ஒரு நிரந்தரமாக தீர்வை காண முடியாமல் தவித்து வருகிறது.

விப்ரோ நிறுவனத்திற்கு சர்ஜாபூரில் வளாகம் உள்ளது. இந்த வளாகளத்தில் வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாகிய ஆசிம் பிரேம்ஜி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ஆசிம் பிரேம்ஜி சித்தராமையாகவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நாங்கள் சர்ஜாபூரை வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளோம். உலகளாவிய சேவை பணிகளுக்கான அந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான அணுகுதல் கட்டுப்பாடு உள்ளது.

பொதுப் பாதைக்காக அல்லாமல் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்பதால், குறிப்பிடத்தக்க நிர்வாகம் மற்றும் சட்டரீதியான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் ஒரு நிலையான, நீண்டகால பயனுள்ளதாக தீர்வாக இருக்காது என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com