என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம"
- பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!
- “வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் வகையில் புரிந்துகொண்டுள்ளதோ?
நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? என்ன என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " சந்தேகத்துக்குரிய வகையில் இந்தியத் தேர்தல்கள் நடைபெறுவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பல திசைகளில் இருந்தும் எழுந்து வருகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் முறைகள், தேர்தல் தேதி அறிவிப்புகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம், கட்சி உடைப்புகளின் போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் முறை என்று பலவற்றின் மீதும் சந்தேகங்களும், அதற்கான நியாயமான காரணங்களும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.
சந்தேகத்திற்கு அப்பால் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?
அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க் கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார்.
7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப் பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி. அந்த ஒரு தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
யாரும் வசிக்காத வீட்டில் அதிக வாக்குகள் வந்தது எப்படி?
''புதிய வாக்காளர்கள் என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு - இப்படி பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆட்சிக்கே காரணமான வாக்கு மோசடி!
இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை.
தங்களுக்கு முழு ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு.
ஆனால், வெற்றியை முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும். தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின் வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் 'தனிக் கவனம்' செலுத்தி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
(2019-இல் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய சூழலில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க. தங்கள் ஆட்சியைக் காப்பாற்றத் தேவையான 9 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்ததையும் நினைவில் கொள்க)
தேர்தல் ஆணையம் உடந்தையா?
பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி அறிந்து, அவற்றில் மட்டும் 'கவனம்' செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது.
- வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாட்னா:
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஒரு பெரிய மோசடி என்று நாங்கள் பலமுறை கூறி உள்ளோம். பீகாரின் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்காவுக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. இவை 2 வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறது. ஒன்றில் 57 வயது என்றும் மற்றொன்றில் 60 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளது. எனவே யார் மோசடி செய்கிறார்கள் என்பதை மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது அல்லது பீகார் துணை முதல்-மந்திரி ஒரு மோசடி செய்துள்ளார் என்பதாகும்.
இவ்விவகாரத்தில் விஜய் சின்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு பிறகும், பீகாரின் துணை முதல்-மந்திரியின் பெயர் 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பது இந்த மோசடிக்கு இதைவிட பெரிய உதாரணம் என்ன இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
புதுடெல்லி:
பீகாரின் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
- சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.
அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.
இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.
உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.
- ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அத்துடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.558 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் இருந்து ரூ.158 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் நடக்கும் 2 மாநிலங்களிலும் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
- தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.
புதுடெல்லி:
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.
இடைத்தேர்தலுக்காக வருகிற 10-ம் தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
வேட்புமனு மீதான பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி எனவும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
- இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க,காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
- டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இதற்கிடையே, விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வரும் டெல்லி போலீஸ் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அதிஷி மற்றும் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர். அவர்கள் தேர்தல் நியாயமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், இன்று எங்களை சந்திப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது. அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் சில பிரச்சனைகளை எழுப்பியதால் சில இடங்களில் வன்முறையும், குண்டர் சண்டையும் நடந்துள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. பெரிய அளவிலான வாக்காளர் அடக்குமுறை குறித்தும் அவர்களை எச்சரித்தோம் என தெரிவித்தார்.
- டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
- ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான மற்ற வாக்குகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதம் மட்டுமே இருந்ததாக தேர்தல் ஆணைய புள்ளி விபரபட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 20-ந்தேதி நிலவரப்படி நாடுமுழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையில் 22.8 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 60 முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் பங்கு 14.7 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் 18 முதல் 29 வயதுடைய இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். இது ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது. அதேநேரம் டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.






