search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake ID"

    • வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார்.
    • மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார். அதேபோல் அவரது மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    மேலும் வாசுதேவன் தனது மாமனாரிடம், அவரது 2 மகள்களும் பேஸ்புக்கில் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடுவதாக அனைவருக்கும் கூறி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவி பெயரில் போலியான கணக்கு தொடங்கி ஆபாசபடம் மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்டதாக வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசாருக்கு தெரியப்படுத்தி, மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×