என் மலர்
நீங்கள் தேடியது "தேஜஸ்வியாதவ்"
- பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
புதுடெல்லி:
பீகாரின் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
- மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது..
- நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்ளும் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தியா கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், சரத்பவார், தேஜஸ்வியாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சேரி, உத்தவ் தாக்கரே உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது.
இந்தியா கூட்டணி மத்தி யில் ஆட்சி அமைக்க வேண் டும் என்றால் மேலும் 38 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதை பெறுவதற்காக சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.
ஆந்திரா, பீகார் இரு மாநி லங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி வழங்கவும் தயாராக இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்ற விறு விறுப்பும், எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.
ஆனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என்று சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ்குமா ரும் திட்டவட்டமாக அறி வித்துள்ளனர். என்றாலும் இன்று மாலை அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடப்பதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.






