என் மலர்
நீங்கள் தேடியது "Election commision"
- வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
- பொதுமக்களின் விண்ணப்பங்களை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4-ந்தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ந்தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ந்தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்றம் to தேர்தல் ஆணையம்: பேரணி நடத்தி கைதான ராகுல் காந்தி விடுதலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.
முன்னதாக கைது செய்யப்பட்டபோது பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது.
உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கோரி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
- அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, "நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்" (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.
ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது. உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார்.
- தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அகிலேஷ் யாதவை போலீசார் கைது செய்தனர்.
- தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத்,அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.
- தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
- பேரணியாகச் சென்ற 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்தது
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன.
- பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகிறது. இதில் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
* கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
* வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
- இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது:
வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொரு முறையே வாக்குப் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
- பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
- வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை நீக்கியுள்ளோம்.
சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
- அப்போது, ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
பெங்களூரு:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. இணை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்குச் சென்றார். அதில் அவர் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது. எந்த விதமான விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் அங்கிருந்து ஆசியன் ஓட்டலுக்கு காரில் சென்றார். அந்தக் காரில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. குழுவினர் கூட்டாக சோதனை நடத்தினர். அதில் ஒரு பை இருந்தது. அதில் சோதனை நடத்தியதில் 2 ஜோடி உடைகள், குடிநீர் பாட்டில்கள் இருந்தது. அங்கும் எந்த விதிமீறலும் இருக்கவில்லை.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை காரில் காபு தொகுதிக்குச் சென்றார். அவரது கார் உதயவாரா சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக எதுவும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து காபு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அங்கும் அவரது கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போதும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதை முடித்துக்கொண்டு அவர் மீண்டும் உடுப்பி ஆசியன் பியர்ஸ் ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவர் தங்கிய அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை. பின்னர் அவர் அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சிக்கமகளூருவுக்கு புறப்பட்டுச் சென்றார். அதனால் அண்ணாமலை தங்கிய அறை மற்றும் பயணித்த ஹெலிகாப்டர், காரில் நடத்தப்பட்ட சோதனையிலும் எங்கும் விதிமீறல் இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.






