என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் ஆணையம்"

    • வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
    • பொதுமக்களின் விண்ணப்பங்களை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4-ந்தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 

    இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ந்தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ந்தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
    • அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ, சத்திய நாரணயன், மற்றும் தாம்பரம் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜ கோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்களார் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைப்பெறும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்களார் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும்.

    தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு திருத்த தீவிர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இப்பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9-ந்தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    1950-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2005-ம் ஆண்டிற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.

    இதுபோல கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டினார்.

    இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வருகிற 13-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    • இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
    • தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    திருவனந்தபுரம்:

    இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.

    கேரளாவிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.

    இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.

    தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது.

    ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்க்கிறது.

    ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு செல்ல தேவையில்லை.
    • தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்க திட்டம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

    அதன்படி பணி மற்றும் இதர காரணங்களுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரும் தேர்தலில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறை மூலம் புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவுக்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் இருந்தே தொலைதூர வாக்களிப்பு மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க, வரும் ஜனவரி 16-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் கலந்து கொண்டு எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளது. 

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    • தேர்தல் நன்னடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
    • மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதனால் தேர்தலைச் சந்திக்க தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் அன்றே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    கோவில்கள், சர்ச்கள், மசூதிகள், குருதுவாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்குள் சென்று தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்போ, அரசாணைகளோ வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசுத்துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது. 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    ராஞ்சி:

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் குழு இன்று ஜார்க்கண்ட் சென்றது. 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.

    அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்டில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    2019-ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. டிசம்பர் 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியானது.

    ×