search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Election Commission"

    • 1950 ஜனவரி 25, தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு சட்டப்படி உருவானது
    • சில மாதங்களில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது

    1947 ஆகஸ்ட் 15, இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரமடைந்து சுயாட்சி மிக்க தனி நாடாக உருவெடுத்தது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    1950 ஜனவரி 25 அன்று தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவானது.


    1950 மார்ச் மாதம், சுகுமார் சென், இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக (CEC) பதவியேற்றார்.


    ஒரு மாதத்திற்கு பிறகு பாராளுமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்" (Representation of People's Act) இயற்றியது.

    இச்சட்டத்தின்படி, 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

    பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி மக்களே பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறை விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது.

    1951 அக்டோபர் தொடங்கி 1952 பிப்ரவரி வரை முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றது.

    2011 வருடத்தில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி 25 "தேசிய வாக்காளர் தினம்" என நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்களை பெருமளவு ஈடுபட செய்யும் விதமாகவும், வாக்குச்சீட்டின் மதிப்பை உணர்த்தும் விதமாகவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் பதிவு செய்து கொள்வதை ஊக்குவிக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    2024 ஜூன் 16 அன்று தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைவதால், புதிய அவையின் 543 இடங்களை தேர்வு செய்ய, ஏப்ரல் மற்றும் மே மாத இடையில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.


    தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், இதற்கான தகவலை சில தினங்களில் அறிவிப்பார்.

    இந்நிலையில், தேசிய வாக்காளர் தினம் குறித்து இன்று வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர், துடிப்பான ஜனநாயகத்தை கொண்டாடும் இந்நாளில், பதிவு செய்து கொள்ளாத தகுதி பெற்ற வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி சோதனை வருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கி உள்ளது.

    தேர்தல் ஆணையத்துக்கு தற்போதுள்ள பெரும் சவால்களில் பணப்பட்டு வாடாவை தடுப்பதுதான் முதன்மையான சவாலாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால் அதை எப்படி தடுப்பது என்பதில்தான் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவுக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த பணம் ரூ.300 கோடியாக உயர்ந்தது.

    அந்த தேர்தலின்போது ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டு வாடா ரூ.500 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிசு பொருட்களும் கைமாறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து பணப் பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. எந்தெந்த துறைகள் மூலம் எப்படி பணப் பட்டுவாடாவை தடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

    இதில் முடிவு எடுப்பதற்காக அடுத்த மாதம் ஆலோசனை கூட்டம் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரித்துறையினர், மத்திய நேரடி வரி விதிப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    அவர்களிடம் கருத்து கேட்டு பணப்பட்டு வாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டு வாடாவை தடுக்க உள்ளூர் போலீசாரை எப்படி பயன்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதமே வாகன சோதனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, தனது ஆட்சியை கடந்த வாரம் கலைத்தது.

    இதனால் தெலுங்கானா மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    பல மாநிலங்களில் சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அந்த தொகுதிகள் நிலவரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள், அந்தந்த மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாகி உள்ளன.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


    நவம்பர் மாதம் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு ஆயத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் நவம்பரில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி விட்டது. இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    டி.டி.வி.தினகரனும் இரு தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்துள்ளார். தி.மு.க.வும் களத்தில் குதித்துவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல் களம் சூடு பிடித்துவிடும். #ThiruparankundramBypoll
    ×