என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Commisison"

    • இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
    • தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    திருவனந்தபுரம்:

    இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.

    கேரளாவிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.

    இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.

    தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது.

    ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்க்கிறது.

    ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • இந்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது.
    • அதனால்தான் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்விகளுக்கு காரணம்.

    காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுங்கள்.

    சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும்.

    கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும்போது நீங்களே உங்களை சந்தேகிக்கலாம். அப்போது நீங்கள் அவுட் ஆவது உங்கள் தவறல்ல, மாறாக நடுவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதே காரணம் என்பதை கண்டறியலாம்.

    அதைப்போலவே, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது. அதை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கட்டுப்படுத்துகின்றன.

    தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் காரணமாகவே 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம்.

    இந்த நாடு ஒரு கோவில் போல. அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம். ஆனால் பிரசாதம் யாருக்கு, என்ன கிடைக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    20 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பம் மாதமே இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வரும் நிலையில் இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ADMK #DMK #TTVDhinakaran
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.

    இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

    கருணாநிதி, ஏ.கே.போஸ் இருவரும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் மரணம் அடைந்ததால் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போது தலைமை தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. அந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 11-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகே தமிழ்நாட்டில் 20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அட்டவணையை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைதேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டதில்லை. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் ‘‘மினி பொதுத்தேர்தல்’’ ஆக கருதப்படுகிறது. இந்த 20 தொகுதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


    ஆளும் அ.தி.மு.க.வை பொருத்தவரை தற்போது அந்த கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 10 அல்லது 12 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும். 10 தொகுதிக்கும் குறைவான வெற்றியை பெற்றால் அ.தி.மு.க.வுக்கு சட்டசபையில் 117 இடங்கள் எனும் மெஜாரிட்டியை பெற இயலாது.

    அத்தகைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

    அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. வுக்கு தற்போது சட்டசபையில் 97 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் தி.மு.க.வின் பலம் 117 ஆக உயரும். இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கு சவால்கள் நிறைந்த பலப்பரீட்சை களமாக மாறியுள்ளது. இந்த பலப்பரீட்சையில் தி.மு.க. எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்தே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வின் எதிர்காலம் அமையும். எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.வின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

    தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க. வாக்குகளின் சிதறல்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வாக்குகளை டி.டி.வி.தினகரன் கணிசமாக பிரிப்பார் என்று தெரிகிறது. இதன் மூலம் 20 தொகுதிகளின் வெற்றி - தோல்வியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாக டி.டி.வி.தினகரன் திகழ்கிறார்.

    சில தொகுதிகளில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தினகரன் கட்சி சில தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதுவும் தமிழக அரசியலின் போக்கை மாற்றுவதாக அமையும். இதனால் தினகரன் கட்சி பெறும் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    20 தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த மும்முனை போட்டி 20 தொகுதிகளிலும் கடும் பலப்பரீட்சையை உருவாக்கும்.

    2016-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்த போது இந்த 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி இருந்தது. திருவாரூர் தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இடைத்தேர்தலில் 19 தொகுதிகளையும் அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி சரித்திர சாதனை படைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. #ADMK #DMK #TTVDhinakaran #20ConstituencyElection
    ×