என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
    X

    பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

    • பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
    • தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×