என் மலர்
நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"
- படிவங்களை நிரப்பி கொடுக்க கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை போன்ற காரணங்கள் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கம்
தமிழ்நாடு உட்பட அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பல மாநிலங்களில், எஸ்ஐஆர் நடைமுறையை கையிலெடுத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்களர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க இன்றுதான் (டிச.4) கடைசிநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்களர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை மற்றும் பிற காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்கங்களைக் காண்கின்றன. சென்னை மற்றும் பிற நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தங்கள் பெயர் தவறான காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது என எண்ணும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
- வதந்தியை பரப்பாதீர்கள்.
சென்னை:
கொளத்தூர் தொகுதியில் 84-ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ரபியுல்லா என்ற ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் இருக்கின்றனர் என பா.ஜ.க. எம்.பி. பேசியதை தமிழக பா.ஜ.க. சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் படத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இதில் ரபியுல்லா என்பவரின் பெயர் வரிசை எண் 50-லும், 52-ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் காணொளியில் குறிப்பிட்டது போல ரபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. வாக்குச்சாவடி எண் 157-ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் முஸ்லிம்கள் மட்டும் வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியை பரப்பாதீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புலம்பெயர்ந்த தொழிலாளி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
- சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் (அல்லது அவர்களது சொந்த மாநிலத்தில்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" என்று எப்படி கருதப்பட முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
- பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.
- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் இன்று வாக்காளர் விரைவு பட்டியல் வெளி யிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 169 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 3,726 ஆண் வாக்காளர்களும் 4,529 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8255 வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பத்மநாபபுரம் தொகு தியில் 3,389 ஆண் வாக்காளர்களும் 3,867 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் ஒருவர் என மொத்தம் 7257 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
விளவங்கோடு தொகு தியில் 2884 ஆண் வாக்காளர்களும் 4,166 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 7056 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 4591 ஆண் வாக்காளர்களும் 6154 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 748 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
6 சட்டமன்ற தொகுதிகளி லும் 22,721 ஆண் வாக்கா ளர்களும் 28,433 பெண் வாக்காளர்களும் 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 51,169 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3864ஆண் வாக்காளர்களும் 5520 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9390 பேர், சேர்க்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 1763 வாக்காளர்களும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,391 வாக்கா ளர்களும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 1471 வாக்காளர்களும் பத்நாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 1363 வாக்கா ளர்களும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1256 வாக்காளர்களும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 1146 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்டு வாக்கு சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 298, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313, 3-ம் பாலினத்தவர் 10 என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545, காங்கேயம் தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 295, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551, 3-ம் பாலினத்தவர் 21 என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125, அவினாசி (தனி) மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 313, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394, 3-ம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698, திருப்பூர் வடக்கு மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 374, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540, 3-ம் பாலினத்தவர் 140 என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298, திருப்பூர் தெற்கு மறு சீரமைகப்பட்ட வாக்கு சாவடி 242, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874, 3-ம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783, பல்லடம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 410, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38, 3-ம் பாலினத்தவர் 69 என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486, உடுமலை மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 294, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633, 3-ம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290, மடத்துக்குளம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 287, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120, 3-ம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2513, ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463, 3-ம் பாலினத்தவர் 324, என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் தி.மு.க.சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த்,அதிமுக சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் மணிகண்டன் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்களும், 142 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 46ஆயிரத்து581 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 389 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,215 பேரும் இதர வாக்காளர்கள் 67 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பத்மநாப புரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 05வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,766 ஆண்வாக்காளர்களும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் 25 இதர வாக்காளர்கள் என இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 05 வாக்காளர்கள் உள்ளனர்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பெண் வாக்காளர்கள் 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 443பேர் உள்ளனர்.
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 728ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 921பேர் உள்ளனர்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து697 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 24,994 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்களின் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் உள்ளனர்.
கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 21,473 பெண் வாக்காளர்களும் 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,45,847 பேர்உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகரி சிவப்பி ரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோரிடம் இருந்தனர்.
- மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
- சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்ப ட்டன. அப்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனை த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக் டர் அனீஷ்சேகர் வெளி யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள், 226 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,35,238 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆக உள்ளது. இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள். 226 பேர் 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் இன்று வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 38,509 பேர், புதிதாக சேர்க்கப்பட் டுள்ளனர். அடுத்தபடியாக 23,954 பேர் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள் ஆகியவற்றின்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 3,28,270 பேர் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ள னர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.
ஈரோடு:
தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
- 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறி வுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோ சனைக்கூட்டம் அங்கீ கரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில், ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 வாக்காளர்கள் (ராணுவத்தில் பணிபுரிப வர்கள்) என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர்.
கிராமப் பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங் களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.
பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்பது 1500 வாக்குகளுக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 4 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சா வடிகளின் இறுதி பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுக ர்களுக்கு வழங்கி னார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
- குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.
கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.
விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
- மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை,
கடந்த ஜனவரி 1- ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண் வாக்காளர்கள், 15,51,665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,44,937 ஆண் வாக்காளர்கள், 1,55,569 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,788 ஆண் வாக்காளர்கள், 1,63,157 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 73 பேர் என மொத்தம் 3,18,018 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,26,790 ஆண் வாக்காளர்கள், 2,28,583 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 பேர் என மொத்தம் 4,55,492 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,65,671 ஆண் வாக்கா ளர்கள், 1,64,827 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேர் என மொத்தம் 3,30,537 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,61,736 ஆண் வாக்காளர்கள், 1,66,097 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேர் என மொத்தம் 3,27,964 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,480 ஆண் வாக்காளர்கள், 121641 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் என மொத்தம் 242153 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,60,653 ஆண் வாக்காளர்கள், 1,64,126 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என மொத்தம் 3,24,803 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு சட்டம ன்ற தொகுதியில்1,61,826 ஆண் வாக்காளர்கள், 1,68,853 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3,30,720 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,07,016 ஆண் வாக்காளர்கள், 1,16,772 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என மொத்தம் 2,23,829 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 92873 ஆண் வாக்காளர்கள் 102040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,94,935 வாக்காளர்கள் உள்ளனர்.






