என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர் நீக்கம்"

    • பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
    • பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    • மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
    • அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-ஐதராபாத் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.

    4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உள்ளதால் வாக்கு சதவீதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் தவறாக இருந்தது. அவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
    • தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.

    ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

    அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.

    இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

    அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.

    கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.

    தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • கருப்பு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பால கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வாக்களிக்க செல்லும்போது பட்டிலில் பலரது பெயர் இல்லாததால் ஓட்டுபோட முடியவில்லை.

    வாக்காளர்களை எளிதில் நீக்கும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கக் கூடாது. நீக்குவதற்கு முன்பு பலமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    சென்னையில் 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. யார் யாருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளோம். அந்த பட்டியலை தருவதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் கமிஷனர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அரசை துதிபாட சொன்னால் கவர்னர் எப்படி துதி பாடுவார்?

    முதலமைச்சருக்கு முன்பு கருப்பு பிடிக்கும். ஆனால் இப்போது கருப்பு பிடிக்கவில்லை. கருப்பு அவருக்கு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    தற்போது மினி எமர்ஜென்சி நடக்கிறது. போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரே வெடித்து சிதறுகிறார்கள். நெல்லிக்காய் மூட்டை போல விரைவில் சிதறுவார்கள். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சட்ட மன்றத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×