என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    SIR  நடைமுறை - தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!
    X

    SIR நடைமுறை - தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!

    • படிவங்களை நிரப்பி கொடுக்க கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை போன்ற காரணங்கள் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கம்

    தமிழ்நாடு உட்பட அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பல மாநிலங்களில், எஸ்ஐஆர் நடைமுறையை கையிலெடுத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்களர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.

    இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க இன்றுதான் (டிச.4) கடைசிநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்களர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.

    இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை மற்றும் பிற காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்கங்களைக் காண்கின்றன. சென்னை மற்றும் பிற நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்கள் உள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தங்கள் பெயர் தவறான காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது என எண்ணும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×