என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.கே.15"
- ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய ரக வாகனம் வழங்கப்பட உள்ளது.
- அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய ங்களுக்கு நவீன உபகர ணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் உடனு க்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லும் வகையில் அதிநவீன வாகன ங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை பெரிய நகர பகுதியாகும். காரணம் இங்குதான் ஏராளமான தொழிற்சா லைகள் இயங்கி வருகின்றன.
இதில் பெருந்துறை சிப்காட்டில் பல்வேறு ரசாயனம் மற்றும் உற்பத்தி தொழிற்சா லைகள் இருப்பதால் இங்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக அணைக்க தற்போது கூடுதலாக நவீன ரக சிறிய வாகனம் அரசு சார்பில் வழங்கப்ப ட்டுள்ளது.
இந்த புதிய வாகனத்தில் 300 லிட்டர் தண்ணீர், 100 லிட்டர் நுரை கலவை, 2 பம்ப் மற்றும் வாகனத்தின் டிரைவர் கேபின் முழுவதும் ஏசி வசதியுடன் அமைக்க ப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனம் ஓடும்போதே வீரர்கள் மூலம் தீயை அணைக்கும் வசதி உள்ளது. அதுவும் சோதனை செ ய்தபோது வெற்றியடைந்தது.
இதேப்போல் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய ரக வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் சில வகையான உதிரி பாகங்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை
- வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை
வாழப்பாடி
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்ப டுவதாக, வாழப்பாடி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்த பாரத் (வயது 43) என்பவர், அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.15,000 மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.நாட்டு வெடிகளை இவரே தயாரித்து பதித்து வைத்து விற்பனை செய்து வந்தாரா? அல்லது வேறு யாரிடமாவது இருந்து வாங்கி விற்பனை செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.
அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
- பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
- ஆர்வத்துடன் வந்து செலுத்தி கொண்டனர்
பெரம்பலூர்:
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சை புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
- உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
புதுக்கோட்டை:
விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
- விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
- உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
புதுக்கோட்டை:
விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்


More stills from #HeroPooja today😎#Hero@Siva_Kartikeyan@akarjunofficial@Psmithran@thisisysr@kalyanipriyan@george_dop@_Ivana_official@dhilipaction@DoneChannel1@gobeatroutepic.twitter.com/AQzcIN0cI9
— KJR Studios (@kjr_studios) March 13, 2019