என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 15,600 கன அடியாக குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 15,600 கன அடியாக குறைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.

    அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×