திருப்பூரில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ரூ.2 கோடி நன்கொடை

நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை.ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் ரூ.2 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் ரூ.2 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

பல்லடம் :

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்க ப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில், ரூ.2 கோடி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்த செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், ஏற்றுமதி காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், செஞ்சிலுவை சங்க நிர்வாகி தாமோதரன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏவிபி. கார்த்திகேயன், பல்லடம் ஆறுமுகம், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com