search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆந்திரா பயணம்- நாளை திருப்பதியில் தரிசனம் செய்கிறார்
    X

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆந்திரா பயணம்- நாளை திருப்பதியில் தரிசனம் செய்கிறார்

    • காணொலிக் காட்சி மூலம் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் இரவு திருமலையில் தங்கி ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராக சுவாமி கோவில், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    தொடர்ந்து ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்லும் அவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், கலந்துரையாட உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×