என் மலர்
நீங்கள் தேடியது "President of India"
- மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி வழி கல்வியே உதவுகிறது.
- தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:
கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் வகையிலான மத்திய அரசின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை.

தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பதே மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும், பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தும்.
இது நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும். மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிரமத்தை நீக்குவதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பிந்தைய 2-வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
3-வது அமர்வில் மாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பொருட்களில் விவாதங்கள் நடக்கிறது. 4-வது அமர்வில் ராஜ்யபால் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் விவாதிக்கின்றனர்.
மாநாட்டின் 5-வது அமர்வில் (5-ந்தேதி) மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்த விவாதமும், 6-வது மற்றும் இறுதி அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர்கள் அறிக்கை வழங்கலும் இடம்பெறுகிறது. இந்த அமர்வில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை, வெளியுறவுத்துறை மந்திரிகளும் உரையாற்றுகின்றனர்.
இதைப்போல துணைநிலை கவர்னர்களுக்கு என சிறப்பு அமர்வு ஒன்றும் 5-ந்தேதி தனியாக நடத்தப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்களின் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன், மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். #Conference #Governors #Tamilnews