என் மலர்
நீங்கள் தேடியது "Kannada language"
- மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
- கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூரு வந்தார்.
மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலைமைச்சர் சித்தராமையா வரவேற்றனர்.
பின்னர் AIISH வைர விழா நிகழ்வில் கலந்துகொண்டு தனது உரையை தொடங்கிய சித்தராமையா, மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
தனது உரையின் போது இதற்கு பதிலளித்த முர்மு, " முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.
எல்லோரும் தங்கள் மொழியை உயிர்புடன் வைத்திருந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், கன்னடம் காற்றுக்கொள்ள நான் சிறுக சிறுக இனி முயற்சி செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.
கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
- கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும் தெரிவிக்க தடை.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும், கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ளது.
- பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
- வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர முடிவு.
கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில்தான் சேவைகள் வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் வங்கிகளில் இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட ஊழியர்கள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மொழி புரிவதில் தகராறு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது.
- பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெற வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஆங்கில பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டித்தும், பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது. அப்போது சில வன்முறை சம்பவங்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சி தலைநகரில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்திலும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
கர்நாடக அமைச்சரவையிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பபட்டது. இதை முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று ஒப்புதலுடன் அனுப்புங்கள் எனக்கூறி ஜனவரி 30-ம் தேதி திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, தற்போது நடந்து வரும் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசோதா முதன்முதலாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது .
இந்நிலையில், இன்று சட்ட மேலவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் தர உள்ளார்.
இதனால் கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் அனைத்திலும் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் கட்டாயம் என்ற சட்டம் விரைவில் அமல்படுத்தபட உள்ளது.






