என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக நீதிமன்றம்"

    • கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
    • கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும் தெரிவிக்க தடை.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படவில்லை.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

    கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும், கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ளது.

    • சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்று கர்நாடக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
    • கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் சிறை தண்டனையை ரத்து செய்தது.

    கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த துமகூரு நீதிமன்றம், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது.

    இதை எதிர்த்து ரங்கராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

    கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகள் இந்த குற்றத்திற்கு பொறுந்தாது என்றும் தெரிவித்தது.

    மேலும், இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், சடலத்துடன் உடலுறவு கொண்ட வழக்கில் குற்றவாளி ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு அளித்துள்ளது.

    • தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை.
    • பல்வேறு மாநிலங்களிலும் இலவச அறிவிப்பு நடைமுறை இருப்பதாக குற்றச்சாட்டு.

    அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம்பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதில், தேர்தல் விதிகளை மீறி, உத்தரவாதங்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மனுவில், கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் அதன் ஆட்சேபத்தை பதிவு செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    • கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விவரங்களை அறிவித்துள்ளது.
    • தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

    கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

    தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை கொப்பல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.

    வழக்கில் தொடர்புடைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், தீர்ப்பு விவரங்களை கேட்ட உடனே ஆயுள் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

    ×