என் மலர்
நீங்கள் தேடியது "கன்னடம்"
- கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
- கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும் தெரிவிக்க தடை.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும், கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ளது.
- திருக்குறள் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர்.
இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.
கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.
திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம்.
நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.
இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்று கமல் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றி கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லிற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் 'தக் லைப்' படத்திற்கு தடையை விலக்கக்கோரிய மனு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணையில் அம்மாநில உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம் தெரிவித்துள்ளார்.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? கன்னடம் குறித்த கமல்ஹாசன் பேச்சால் தற்பொழுது பதற்றம் உருவாகியுள்ளது ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி நாக பிரசன்னா கருத்து கூறியுள்ளார்.
இந்நிலையில், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் கன்னட வெளியீட்டை தள்ளிவைப்பதாகவும் கமல் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கர்நாடக ஃப்லிம் சேம்பர், கர்நாடக அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான், "தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ?; தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வரலாற்றை படித்தவர் கமல். சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும். KGF, காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடின.
திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும்; கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை. கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம். 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா?" என்று கேள்வி எழுப்பினார்.
- அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும்.
- வங்கி ஊழியர்கள் மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
கர்நாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
- கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட.
பெங்களூரு :
கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட. கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.
கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கன்னடம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த 3, 4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும். கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இவ்வாறு வகுப்பறை கட்டிடங்களை கட்டினால் பள்ளி கட்டிடங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. 'விவேகா' என்ற பெயரில் நாங்கள் பள்ளி கட்டிடங்களை கட்டுகிறோம்.
கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். நடப்பாண்டில் 1 லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும். கர்நாடகத்தில் நாளை (இன்று) உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
கர்நாடகத்தில் 10 வேளாண் மண்டலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவுசார் அடிப்படையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதனால் கர்நாடகம் அறிவுசார் மாநிலம் ஆகும். நமது மண்ணில் ஞானம், உழைப்பு, உழைப்புக்கு மரியாதை உள்ளது.
விவசாய வித்யா திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளோம். 5 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய உதவி செய்கிறோம்.
நாட்டிலேயே அதிக ஞானபீட விருதுகளை பெற்ற மாநிலம் கர்நாடகம்.உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் நாம் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
நமது கலாசாரம் சிறப்பானது. கன்னட கொடியை எல்லா துறைகளிலும் பறக்க விட வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், வேலை, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கன்னட மொழி மீது உணர்வு பூர்வமாக பற்றை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடினர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
- இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.

இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
- ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.
தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ளது.
- ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர்.
ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரணடு நாட்கள் நடைபெற்றது. இதில் தக்கவைத்த வீரர்கள் தவிர்த்து 182 வீரர்கள் வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆர்.சி.பி. விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏலத்தில் புவி, ஹேசில்வுட், நுவான் திஷாரா, லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளரை எடுத்துள்ளது.
ஆகவே இந்த வருடமும் 'ஈ சாலா கப் நமதே' மோடில் பெங்களூரு அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை அணிக்கு சமமாக பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.
ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ள நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ரசிகர்களை கவர்வதற்காக இந்தியில் ஒரு எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ளது. அதில் ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர். அந்த எக்ஸ் கணக்கை தற்போது வரை 2600க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியில் ஆர்.சி.பி. அணி எக்ஸ் கணக்கு தொடங்கியுள்ளது கர்நாடகா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பி. அணியை கன்னட ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
அதே சமயம் இந்தி மொழியில் ஆர்.சி.பி. எக்ஸ் கணக்காகி தொடங்கியுள்ளதை இந்தி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா?
- டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஐடி தொழில்நகரமாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு விளங்கி வருகிறது. கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு மாநிலங்களை சேந்த இளைஞர்கள் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாற்றி வருகின்றனர்.
பெங்களூரில் இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் கன்னட மொழி தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கன்னடர்களிடையே இருந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தொடங்கி ஆட்டோ டிரைவர்கள் வரை அதையே வலியறுத்தி வருகின்றனர்.
இந்த அழுத்தம் சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் கன்னடம் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள், டெல்லிக்கு வாருங்கள் என Cars24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] விக்ரம் சோப்ரா இன்ஜீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய அவரது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா? பரவாயில்லை. ஆ ஜாவோ தில்லி (டெல்லிக்கு வா).
டெல்லி என்சிஆர் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் திரும்பி வர விரும்பினால், vikram@cars24.com என்ற தளத்தில் எனக்கு எழுதுங்கள் - டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.
வேலைக்கு ஆள் தேட விக்ரம் சோப்ரா இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும் ஒரு வகையில் பெங்களூரு வாசிகளை, கன்னடர்களை தவறாக சித்தரிக்கும் பதிவாகவும் இது உள்ளதாக இணைய வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Cars24 என்பது பயன் படுத்திய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஆகும்.
- அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் மராத்தியில் பேசினார்.
- மராத்தியில் பேசிய பெண்ணிடம் கன்னடத்தில் பேசுங்கள் என்று நடத்துநர் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நடத்துநர், அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.
பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி பேசக்கூடிய மக்கள் கணிசமானோர் வாழ்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன. இந்த மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமென மராத்தி பேசக்கூடிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை கன்னட மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் 90 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் பெலகாவியில் இருந்து மராட்டிய மாநிலம் சுலேபாவிக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக மகாதேவப்பா என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவர் மராட்டியத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் டிக்கெட் எடுக்கும்படி கன்னடத்தில் கூறினார். அதற்கு அவர்கள் மராத்தி மொழியில் பேசினர். இதை கேட்டு கோபம் அடைந்த மகாதேவப்பா, கன்னடத்தில் பேசும்படி மாணவ-மாணவிகளை திட்டினார்.
இதை பஸ்சில் பயணித்த மராட்டிய இளைஞர்கள் பார்த்து மகாதேவப்பாவிடம் தகராறில் ஈடுபட்டனர். பலேகுந்திரி என்ற இடத்தில் பஸ் நின்றதும், தகராறு முற்றியது. அப்போது பஸ்சுக்குள் நுழைந்த சிலர் மகாதேவப்பா மற்றும் டிரைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மாரிகாலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் மகாதேவப்பா, மாரிகாலா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பலேகுந்திரி கிராமத்தை சேர்ந்த மாருதி துருமுரி, ராகுல் ராஜூ, பாலு கோஜகேகர் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவனை தவிர்த்து மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மராட்டியத்தை சேர்ந்த மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் கண்டக்டர் மகாதேவப்பா மீது போலீசார் 'போக்சோ'வில் வழக்குப்பதிவு செய்தனர். மகாதேவப்பா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், மோசமான சைகைகளை செய்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் மாரிகாலா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கூறினர். மேலும் கர்நாடக-மராட்டிய எல்லையிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் மராட்டிய அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் சாலையில் டயர்கள், உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் சித்ரதுர்காவில் உள்ள குய்லால் சுங்கச்சாவடியில் குய்லாலா சுங்கச்சாவடி அருகே நவ நிர்மாண் சேனா அமைப்பினர் மகாராஷ்டிராவை சேர்ந்த பஸ் டிரைவர் ஹரிஜாதவினர் முகத்தில் மைபூசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் பஸ் முழுவதும் கருப்பு வண்ணப்பூச்சை தூவினர். ஜெய்கர்நாடகா, ஜெய் கன்னடம், பெல்காம் எங்களுடையது என பஸ்சில் எழுதி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சேனா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து பெல்காமுக்கு புறப்பட்ட பஸ்களை கருணாட விஜய சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தி சித்ரதுர்கா பஸ் நிலையத்தில் போராட்டத்தல் ஈடுபட்டனர். இந்நிகழ்வின்போது ஆண் பயணிகளுக்கு சேலைகள் உடுத்தி, பூக்கள் வழங்கப்பட்டன. பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பெலகாவியை விட்டு மகாராஷ்டிரா செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர்.
அதேநேரம் மராட்டியத்துக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் மீது அங்கிருக்கும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெலகாவி மாவட்டம் மராட்டியத்துக்கு சொந்தமானது. இம்மாவட்டத்தை கர்நாடகாவில் இருந்து பிரித்து மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்க்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மராட்டிய மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதை தடுக்காதீர்கள் என கூறி போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே பயணிகளின் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு இருமாநில பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருமாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையான நிப்பாணி தாலுவாவில் உள்ள கோகனொல்லி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.