என் மலர்
சினிமா செய்திகள்

துணை முதல்வரின் தலையீட்டால் முடிவுக்கு வந்த சிக்கல் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி
- பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார். இதனையடுத்து கன்னட பிக்பாஸ் செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீலிடப்பட்ட பிக்பாஸ் ஸ்டூடியோ, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தலையீட்டின் பேரில் மீண்டும் திறக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாச்சாரத்திற்கும் கேடான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இதற்கு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.






