என் மலர்
நீங்கள் தேடியது "கிச்சா சுதீப்"
- பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார். இதனையடுத்து கன்னட பிக்பாஸ் செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீலிடப்பட்ட பிக்பாஸ் ஸ்டூடியோ, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தலையீட்டின் பேரில் மீண்டும் திறக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாச்சாரத்திற்கும் கேடான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இதற்கு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
- பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
- சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.
இதனிடையே கன்னட மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.
இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 முடிவுக்கு வருகிறதா என்று கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி, மார்க் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியானது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக கே47' என பெயரிடப்பட்டது.
சமீபத்தில், நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் டைட்டிலை வெளியிட்டது. அதில், இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி அன்று முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சில விஷயங்களில் நான் தலையிடமாட்டேன்.
- தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவான புதிய படம் (டெவில்) வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு நல்லது நடக்கட்டும். அவரது வேதனைகள் அவருக்குதான் தெரியும். அவரது ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் அது தவறாகிவிடும். சட்டம் என்று வந்தால் சட்டப்படியே அரசு செயல்படும். அதற்கு நாம் குறுக்கே நிற்கக்கூடாது.
சரியா?, தவறா? என்று கோர்ட்டில் முடிவாகும். சில விஷயங்களில் நான் தலையிடமாட்டேன். தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. நானும், தர்ஷனும் 18 வயது இளைஞர்களா?. எங்களுக்கு சொந்த அறிவு இல்லையா?. நாங்கள் 2 பேரும் ஏன் பிரிந்தோம் என்பது எங்களின் 2 பேருக்கு மட்டுமே தெரியும். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள். ஆனால் தற்போதைக்கு நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் என்றார்.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப்.
- கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படம் தற்பொழுது K47 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை 7 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
- உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘கப்ஜா’.
- இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'கப்ஜா'.இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

கப்ஜா
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கப்ஜா
ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'கே. ஜி எஃப்' படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இப்படம் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கப்ஜா போஸ்டர்
'கப்ஜா' திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது," 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். " என்று கூறினார்.
- நடிகர் கிச்சா சுதீப் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் நடிக்கும் ‘கப்ஜா’ திரைப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இவர் தற்போது பான் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் இவர் நடிக்கும் 'கப்ஜா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிச்சா சுதீப்
கார்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடிகர் கிச்சா சுதீப் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் பரவி வந்தது. இதற்கு நடிகர் சுதீப் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, "அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அது பற்றி முடிவு எடுக்கும் போது கண்டிப்பாக அதை தெரியப்படுத்துவேன். அதற்கு முன் என் ரசிகர்கள் அதை விரும்புகிறார்களா? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்கிற போது, நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்" என்று கூறினார்.
- தமிழில் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப்.
- இவர் தற்போது பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
இந்நிலையில் கிச்சா சுதீப், இன்று இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

கிச்சா சுதீப்
தற்போது பாஜகவில் இணைய நடிகர் சுதீப் திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பானது.
- இவர் பாஜக கட்சிக்காக பரப்புரை செய்வேன் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
இந்நிலையில் பாஜக கட்சிக்காக பரப்புரை மட்டும் செய்வேன். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கிச்சா சுதீப் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
- நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
- இவர் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாக கூறினார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை - கிச்சா சுதீப்
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக இவர் பிரசாரம் செய்யவுள்ளார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கதுறை என யாரும் என்னை மிரட்டவில்லை என்றும் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாக இன்று காலை தெரிவித்தார்.
- கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. இதையடுத்து இன்று பாஜக கட்சியில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை -கிச்சா சுதீப்
இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.






