search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiccha Sudeep"

    • கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப்.
    • இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கப்ஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    கிச்சா சுதீப்

    இந்நிலையில், நடிகர் சுதீப் இயக்குனர் சேரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுதீப் அடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் 2 படங்களை இயக்குனர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    கன்னட சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் கிச்சா சுதீப் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் ‘கப்ஜா’ திரைப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இவர் தற்போது பான் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் இவர் நடிக்கும் 'கப்ஜா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    கிச்சா சுதீப்

    கார்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடிகர் கிச்சா சுதீப் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் பரவி வந்தது. இதற்கு நடிகர் சுதீப் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, "அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அது பற்றி முடிவு எடுக்கும் போது கண்டிப்பாக அதை தெரியப்படுத்துவேன். அதற்கு முன் என் ரசிகர்கள் அதை விரும்புகிறார்களா? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்கிற போது, நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்" என்று கூறினார்.

    • 'சூப்பர் 10’ கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கவுள்ளது.
    • இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.


    கிறிஸ் கெய்ல்

    இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி 'டி10' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.


    கிச்சா சுதீப்

    மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில்,  "சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்" என்று கூறியுள்ளார்.

    ஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
    போலீஸ் அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியையும், மருத்துவரான நாசரையும் கொலை செய்துவிட்டு, ரவிசங்கரை கொலை செய்வதற்காக போகும் போது, கிச்சா சுதீப்பை போலீசார் கைது செய்கிறார்கள். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் ஜெகபதி பாபு.

    கொலை குறித்து ஜெயகதி பாபுவின் விசாரணையில் சுதீப் கூறும் போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தானும் தனது குடும்ப நண்பரும், உதவியாளருமான பருல் யாதவ்வும் காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஆசிஷ் வித்யார்த்தியும், நாசரும் தனது வாழ்க்கையில் வந்து, தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் விவரிக்கிறார்.



    கடைசியில், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் நாசரை சுதீப் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட முன்கதை என்ன? என்பதே சுதீப் எனும் கைதியின் மீதிக்கதை.

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தனது வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறைவான நேரங்கள் மட்டுமே வந்தாலும் பாவனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையோடு ஒன்றி தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் பருல் யாதவ். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், ஜெகபதி பாபு என அனைவருமே அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.



    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் நடித்த கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு த்ரில்லர் படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கும் வேளையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த த்ரில் கதையை தற்போது பார்க்கும் போது ஒருவித நெருடலை கொடுக்கிறது. எனினும் வித்தியாசமான கதை என்பதால் பார்ப்பதில் தவறில்லை.



    ஷஷாங்க் இயக்கம், வி.ஹரிகிருஷ்ணாவின் இசை, ஷேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, ரவி வர்மாவின் படத்தொகுப்பு என படக்குழுவினரின் வேலைகள் கச்சிதம்.

    மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு கைதி' பார்க்கலாம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav

    ×