என் மலர்

    நீங்கள் தேடியது "Bhavana"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
    • இவர் நடிக்கவுள்ள 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.


    தி டோர்

    தி டோர்

    இந்நிலையில் நடிகை பாவானா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தி டோர் (The Door)' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்தேவ் இயக்குகிறார். இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
    • இவரின் 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.


    பாவனா 86

    பாவனா 86

    இந்நிலையில் நடிகை பாவானாவின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை பாவனா தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


    பாவனா

    இந்நிலையில் வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து பாவனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ''மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள்.


    பாவனா

    இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் பரவி வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பாவனா.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


    பாவனா

    சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் வருத்தமடைந்த பாவனா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    பாவனா

    அதில், "ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன், என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.
    • இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

     

    கோல்டன் விசா பெற்ற கமல்

    கோல்டன் விசா பெற்ற கமல்

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

     

    கோல்டன் விசா பெற்ற பாவனா

    கோல்டன் விசா பெற்ற பாவனா

    இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையும் தமிழில் தீபாவளி, ஆர்யா, வெயில், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த பாவனாவுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டா, தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். 

    பாவனா

    ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
    போலீஸ் அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியையும், மருத்துவரான நாசரையும் கொலை செய்துவிட்டு, ரவிசங்கரை கொலை செய்வதற்காக போகும் போது, கிச்சா சுதீப்பை போலீசார் கைது செய்கிறார்கள். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் ஜெகபதி பாபு.

    கொலை குறித்து ஜெயகதி பாபுவின் விசாரணையில் சுதீப் கூறும் போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தானும் தனது குடும்ப நண்பரும், உதவியாளருமான பருல் யாதவ்வும் காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஆசிஷ் வித்யார்த்தியும், நாசரும் தனது வாழ்க்கையில் வந்து, தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் விவரிக்கிறார்.



    கடைசியில், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் நாசரை சுதீப் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட முன்கதை என்ன? என்பதே சுதீப் எனும் கைதியின் மீதிக்கதை.

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தனது வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறைவான நேரங்கள் மட்டுமே வந்தாலும் பாவனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையோடு ஒன்றி தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் பருல் யாதவ். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், ஜெகபதி பாபு என அனைவருமே அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.



    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் நடித்த கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு த்ரில்லர் படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கும் வேளையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த த்ரில் கதையை தற்போது பார்க்கும் போது ஒருவித நெருடலை கொடுக்கிறது. எனினும் வித்தியாசமான கதை என்பதால் பார்ப்பதில் தவறில்லை.



    ஷஷாங்க் இயக்கம், வி.ஹரிகிருஷ்ணாவின் இசை, ஷேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, ரவி வர்மாவின் படத்தொகுப்பு என படக்குழுவினரின் வேலைகள் கச்சிதம்.

    மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு கைதி' பார்க்கலாம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் பாவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #96TheMovie #Trisha #Bhavana
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது.

    படத்தை தெலுங்கி ரீமேக் செய்யும் பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது.



    கன்னட இயக்குநர் பிரீதம் குபியும், நடிகர் கணேஷும் இணைந்து கன்னடத்தில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ‘99’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். #96TheMovie #VijaySethupathi #Trisha #Bhavana

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.

    இதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.



    இது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print