என் மலர்
நீங்கள் தேடியது "kichcha sudeep"
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப்.
- கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படம் தற்பொழுது K47 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை 7 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
- உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘கப்ஜா’.
- இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'கப்ஜா'.இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

கப்ஜா
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கப்ஜா
ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'கே. ஜி எஃப்' படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இப்படம் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கப்ஜா போஸ்டர்
'கப்ஜா' திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது," 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். " என்று கூறினார்.
- தமிழில் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப்.
- இவர் தற்போது பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
இந்நிலையில் கிச்சா சுதீப், இன்று இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

கிச்சா சுதீப்
தற்போது பாஜகவில் இணைய நடிகர் சுதீப் திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பானது.
- இவர் பாஜக கட்சிக்காக பரப்புரை செய்வேன் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
இந்நிலையில் பாஜக கட்சிக்காக பரப்புரை மட்டும் செய்வேன். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கிச்சா சுதீப் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
- நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
- இவர் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாக கூறினார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை - கிச்சா சுதீப்
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக இவர் பிரசாரம் செய்யவுள்ளார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கதுறை என யாரும் என்னை மிரட்டவில்லை என்றும் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- நடிகர் சுதீப் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஹெப்பிலி' என்ற திரைப்படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடித்திருப்பார். இது தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பலர் இது போன்ற ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
மாணவர்களின் இந்த ஹேர்ஸ்டைலினால் ஆத்திரமடைந்த கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், சிவாஜி நாயக் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், சலூன் கடைக்காரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை போன்று தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள்.

நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் முறையான ஹேர்ஸ்டைலில் வரும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஆனாலும், சிலர் அப்படிதான் வருகிறார்கள். மாணவர்கள் சினிமாவினால் மிகவும் எளிமையாக ஈர்க்கபட்டு விடுகிறார்கள். இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.
- நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.
- இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.

கிச்சா 47 போஸ்டர்
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப்.
- இவர் தற்பொழுது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கிச்சா ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தானு மற்றும் சுதீப் கிச்சா இணைந்து தயாரித்திற்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார்.
திரைப்படத்தில் சுனில், ச்குருதா, சம்யுக்தா , வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் கதைக்களம் ஓர் இரவில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. டிரெய்லரின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப்.
- மேக்ஸ் திரைப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் கிச்சா ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தானு மற்றும் சுதீப் கிச்சா இணைந்து தயாரித்திற்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் ஓர் இரவில் ஒரு காவல் நிலையத்திற்கும் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
திரைப்படத்தில் சுனில், ச்குருதா, சம்யுக்தா , வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அதில் "MAX' imum action உள்ள
ஆனால் மிக தத்ரூபமாக கதையோடு ஒட்டிய திரைக்கதையோடு ஒட்டிய அதிரடி action ஓவ்வொன்றும்! என்னிடம் பணிபுரிந்த விஜயவானன்
இன்று விஜய கார்த்திகேயாவாக மாறி அற்புதமாக இயக்கியிருக்கும் படமென்பதால் கூடுதல் ஆர்வத்துடன் பார்த்தேன். இறுதிவரை சிறு தொய்வில்லாமல் மனுஷன் மிரட்டியிருக்கிறார். நண்பர் தாணுவுக்கு முதலில் வாழ்த்துச் சொல்லி பின் நாயகன் சுதீப் அவர்களிடமும் பேசினேன் . படம் பிடித்து விட்டால் கூடவே பைத்தியமும் பிடித்துவிடும் எனக்கு. இரவெல்லாம் சம்மந்தப் பட்டவர்களைப் பாராட்டியே விடிந்துவிடும். சுதீப் fight செய்யும்போது மாஸ்டர் சொல்லிக்கொடுத்து அடிப்பது போலவேயில்லை. அப்படியொரு body language-ல் action னிலும் actingகிலும் பின்னிப் பெடலெடுக்கிறார். அவர் செய்த fightஐ விட கிட்டத்தட்ட 25 வருடங்கள் fight செய்து வரும் 25 நிஜ HAPPY யாக இயக்குனர் கொண்டாடுவதும் இனி பலரும் அவரை கொண்டாடுவதும் மகிழ்ச்சி!" என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.
- தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒரவர் கிச்சா சுதீப். பெரும்பாலும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கிச்சா சுதீப் தனது நேர்த்தியான நடிப்பு திறமையால் புகழ் பெற்றுள்ளார். இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.
இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மற்றும் தேர்வு குழுவுக்கும் நடிகர் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "மரியாதைக்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் மன்ற உறுப்பினர்களே,
சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். இந்த கௌரவத்திற்காக மரியாதைக்குரிய நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளை பெறுவதை நான் நிறுத்தியதோடு இன்றும் அதே முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த முடிவு பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தங்கள் படைப்பில் முழு முயற்சியுடன் பணியாற்றும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அதைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
மக்களை மகிழ்விப்பதற்கான எனது அர்ப்பணிப்பு எப்போதும் விருதுகளை எதிர்பார்க்காமல் இருந்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இந்த அங்கீகாரம் மட்டுமே சிறந்து விளங்க என்னை தொடர்ந்து பாடுபட வைக்கும் ஊக்கமாக அமைகிறது.
இந்த அங்கீகாரம் மட்டுமே என் வெகுமதி என்பதால், என்னை தேர்ந்தெடுத்த நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவு ஏற்படுத்தக்கூடிய ஏமாற்றத்திற்கு நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும் மாநில அரசிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை, எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னை பரிசீலினை செய்ததற்காக நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.