search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanjay dutt"

    • தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி.
    • 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் நிர்ணயித்துள்ளது.
    • வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்து மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைத்திருக்கும்.

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பலவேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

    பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

     

    இந்த முறைகேடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்ட சால்வர் கேங்கை சேர்ந்த நபர்கள் கைது செயயப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் 'Solver gang' நிர்ணயித்துள்ளது. முன்னா பாய் சர்வீஸ் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் 'முன்னா பாய் எம்பிபிஎஸ்'. இதில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தனக்கு பதிலாக வேறொருவரை மிரட்டி அந்த பரீட்சையில் ரவுடியான முன்னா பாய்  வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்துவை மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும்.

     

     

    இதை பிரதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் முன்னா பாய் சர்வீஸை சால்வர் கேங் அறிமுகப்படுத்தி முறைகேடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் வட மாநிலங்களில் இயங்கி வந்த சால்வர் கேங்கின் முக்கிய மூளை ரவி ஆத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ இன்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது. 

     

    • "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
    • 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை வெட்கமின்றி ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.

    அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.

    காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு "மரணம்" தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. "நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, "பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை "பல்லு" என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று கூறப்படுகிறது.

    மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் "எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்" என்றும் கூறியுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.

    இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


    • KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

    KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.

    இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

     ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

     

    "கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.

    KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

    அக்ஷய் குமாரின் 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் தத் கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படாத விதத்தில் நடப்பதாக உணர்ந்த சஞ்சய் தத் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்கிரிப்டில் பல மாற்றங்களுடன், படப்பிடிப்பின் கால்ஷீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டாதல் வெளியேறியதாக கருதப்படுகிறது.

    சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்திருப்பதால், தயாரிப்பாளர்கள் தற்போது நடிகரை சமாதானப்படுத்துவதா அல்லது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

    இப்படத்தில் சுனில் ஷெட்டி, திஷா பதானி, ரவீனா டாண்டன், லாரா தத்தா, அஃப்தாப் ஷிவ்தாசானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், மிகா சிங், முகேஷ் திவாரி, ஜாகிர் ஹுஸ்ஸான், ஜாகிர் ஹுஸ்ஸான் ஆகியோர் நடித்துள்ளனர்.

    அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    • 2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி
    • இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரெடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது திரைப்பெயரை உஸ்தாத் ராம் பொதினேனி மாற்றிக்கொண்டார்.

    இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்
    • சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்

    64 வயதான பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற தகவல் பரவியது

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கு முடிவுகட்ட விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் ஈடுபடுவதாக முடிவு செய்தால், நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன். ஆகவே இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்.

    அப்போது அவருக்கு சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்தார். அப்போது சஞ்சய் தத் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2005- ஆம் ஆண்டு மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்பியது.
    • இந்த பாடல் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'. சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் பாடிய 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் யூ-டியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.



    அதேசமயம் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருந்தார்.



    இதனிடையே இப்பாடலுக்கான சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை அறிந்து கொள்ள மத்திய தணிக்கைக் குழுவை அவர் அணுகியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய தணிக்கைக்குழு, 'நா ரெடி' பாடலின் பொது வெளியீட்டிற்கு இதுவரை யு, ஏ, யு/ஏ போன்ற எந்தவித சான்றிதழும் வழங்கப்படவில்லை எனவும், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் திரைத்துறை தணிக்கை சட்டத்தின் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், அனுமதி பெறாமல் வெளியாகியுள்ள 'நா ரெடி' பாடலை நீக்கும்படி நீதிமன்றத்தை நாடப்போவதாக ஆர்.டி.ஐ. செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் அவர் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.



    இதற்குமுன்பு கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தில் கொக்கி குமாராக தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் லியோ படத்திலும் கொக்கி குமார் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அனுராக் காஷ்யப் இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி எதிர்ப்புகள் கிளம்பியது.
    • இந்த பாடலுக்காக படக்குழு அதிரடி காட்டியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.



    இந்நிலையில் "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டுள்ளது.



    • ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த பாடல் தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×