search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photoshoot"

    • சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
    • ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

     தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

    தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

     

    இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
    • சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.

    சின்னமனூர் :
    தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை கிராமம். 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில் அதிகளவில் தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
    திரும்பிய திசையெல்லாம் பசும்போர்வை போர்த்தியது போல பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோசன நிலையே காணப்படும். இங்கு யானை, காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
    மேலும் புலிகள் சரணாலய பகுதிகள் இருப்பதால் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருந்தபோதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்   மேகமலைக்கு வராமல் செல்வதில்லை. தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.

    குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து  போட்டோஷூட் எடுப்பதற்கு சிறந்த இடமாக இது உள்ளது. தோட்டங்களின் மையப்பகுதிகளுக்கு சென்று பலமணி நேரம் செலவிட்டு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக குடை,  பிளாஷ், பலூன், பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து போட்டோஷூட் நடத்துகின்றனர்.

    அவை முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
    தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இங்கு அட்டை புழுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தோட்டங்களுக்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர்.
    • புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் விபூஷ்னியா டாக்டர். இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டரான லோகேஸ்வரனுக்கும் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளான டாக்டர் ஜோடி தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்குள்ள ஓட்டலில் தங்கி புதுமண ஜோடி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலித்தீவில் உள்ள கடலில் மோட்டார் படகில் சென்றபோது தவறி விழுந்ததில் தம்பதிகள் விபூஷ்னியா-லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர். இதற்கிடையே புதுமண ஜோடி போட்டோ ஷூட் எடுத்தபோது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவத்தன்று தம்பதியினர் விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகிய இருவரும் உற்சாகத்துடன் போட்டோ ஷூட்டுக்காக கடலில் மோட்டார் படகில் சென்று உள்ளனர். அப்போது வேகமாக திரும்பியபோது படகு கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிக்கிய புதுமண தம்பதி விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகியோர் கடலில் மூழ்கி இறந்து போய் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கிய லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையும், விபூஷ்னியாவின் உடல் நேற்றும் கடலில் மீட்கப்பட்டது.

    புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பலியான விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஜோடியின் உடலை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்தோனேசியாவில் இருந்து நேரடி விமானம் இல்லை. எனவே உடல்கள் மலேசியா வழியாக சென்னை கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். எனவே உடல்களை கொண்டு வர 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகலாம் என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேனிலவு கொண்டாட சென்ற புதுமண தம்பதி திரும்பி வந்ததும் வரவேற்க தயாராக இருந்த உறவினர்கள் அவர்கள் பலியானது அறிந்ததும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    • இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது விபரீதம்.
    • சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர்.

    இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.
    • இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன.

    சமீப காலமாக திருமண போட்டோஷூட்டுகளுக்காக மணமக்கள் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதோடு சில நேரங்களில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஒரு கதையை சொல்வதாக இருக்கிறது. இவர்கள் இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன. முதலில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் மணமகள் நடந்து வரும்போது ஒரு பாம்பை பார்க்கிறார்.

    உடனே அவர் பாம்பு பிடிப்பவரை உதவிக்கு அழைக்கிறார். அவர் அங்கு வந்ததும் பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார். அதன் பிறகு பாம்பை கையில் பிடித்துக்கொண்டு செல்லும்போது தன்னை தொடர்பு கொள்ளுமாறு செய்கை செய்கிறார். கடைசியில் 2 பாம்புகள் ஒன்றாக காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் சமூகவலைதள பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருசிலர் மணமக்களை வாழ்த்தியும், சிலர் விமர்சித்தும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×