search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukural"

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடியேற்று விழாவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாக்களில்,மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வெற்றிச்செல்வன், நந்தகோபால், மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ், பூபதி, முன்னவன், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கழுகு 2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்க இருக்கும் ‘திரு.குரல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நடிக்க இருக்கிறார். #Krishna #Thirukural
    நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கழுகு 2’. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து ‘கழுகு 2’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

    இப்படத்தை அடுத்து கிருஷ்ணா ‘திரு.குரல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இவருடன் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரபு இயக்கும் இப்படத்தை என்.எச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் துவங்குகிறது. இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தை  விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
    ×