search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்
    X

    கோப்புபடம்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடியேற்று விழாவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாக்களில்,மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வெற்றிச்செல்வன், நந்தகோபால், மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ், பூபதி, முன்னவன், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×