என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penguins"

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும்.

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.

    இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ஏன்?

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.

    இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.

    அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.

    கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது. 

    • பறவை காய்ச்சல் காரணமாக பென் குயின்கள் சாகவில்லை என அதிகாரிகள் அறிவிப்பு
    • அதிக அளவிலான எண்ணிக்கையில் இவை இறந்திருப்பது இயல்பானது அல்ல

    செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது.

    பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின் காரணம் மர்மமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகெல்லனிக் பெங்குவின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரை தேடி அவை வடக்கே இடம் பெயர்ந்து, பிரேசில் நாட்டின் மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோ நகர கடற்கரையை அடைகின்றன.

    "தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் இறந்திருக்கும் இந்த பறவையினங்கள் பெரும்பாலும் மிக இளம் வயது கொண்டவை. அவை உருகுவே நாட்டின் கரையோரங்களுக்கு நீரோட்டங்களால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இது தண்ணீரிலேயே ஏற்பட்டிருக்கும் இறப்பாகும்.

    அவற்றின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளின் மூலம் இறப்புக்கு காரணம் பறவை காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பறவைகள் இறப்பது இயல்பானது. ஆனால் இவ்வளவு அதிக அளவிலான எண்ணிக்கையில் இவை இறந்திருப்பது இயல்பானது அல்ல. கடந்த ஆண்டு பிரேசிலில் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்து என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லெய்சகோயன் கூறினார்.

    அட்லாண்டிக் கடற்கரையின் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு, 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்து கிடந்தன என லகுனா டி ரோச்சா எனப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியின் இயக்குனர் ஹெக்டர் கேமரிஸ் தெரிவித்தார்.

    அதிகப்படியான மீன்பிடித்தலும், சட்டவிரோத மீன்பிடித்தலுமே இந்த உயிரினங்களின் இறப்பு அதிகரிப்பதற்கு காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அட்லாண்டிக் கடலில் ஒரு துணை வெப்பமண்டல சூறாவளி, ஜூலை மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு பிரேசிலை தாக்கியது. இதனால் ஏற்பட்ட மோசமான வானிலையால் பலவீனமான உயிரினங்கள் இறந்திருக்க கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • வீடியோ இணையத்தில் வெளியாகி 3 நாட்களில் 10½ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
    • பென்குயினின் நாகரிகம் மற்றும் பொறுமை குணத்தை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    தென்துருவமான அண்டார்டிகாவின் அட்சியோ தீவுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சுற்றுலா சென்றது. அப்போது அந்த குழுவில் காதலர்களாக பழகி வரும் சியாரா மற்றும் கெவின் ஜோடி, கட்டி அணைத்தப்படி பனி பிரதேசத்தின் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர். அங்கே பென்குயின் ஒன்று அந்த வழியாக கடந்து செல்ல முயன்றது.

    அப்போது காதலர்களின் நெருக்கத்தை தொந்தரவு செய்ய தயங்கி அமைதியாக காத்திருந்தது. இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர், பென்குயின் குறித்து அந்த ஜோடியிடம் கூறினார். உடனடியாக அந்த காதல் ஜோடி விலகி நிற்க, இதனை தொடர்ந்து அவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பெங்குயின் காதல் ஜோடியை கடந்து சென்றது.

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 3 நாட்களில் 10½ கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. பென்குயினின் நாகரிகம் மற்றும் பொறுமை குணத்தை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.



    ×