என் மலர்
நீங்கள் தேடியது "Air Force Day"
- 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
- இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.
மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.
இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
- அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 91-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 91-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை தினத்தில் எங்கள் அனைத்து விமான வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். சவால்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் வலிமையான, தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க விமானப்படையைக் கொண்டிருப்பதில் தேசம் பெருமிதம் கொள்கிறது. வானத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, மனிதாபிமான உதவிகளிலும் முன்னணியில் இருக்கும் நமது எழுச்சியூட்டும் ஹீரோக்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்ட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை தினத்தில் அனைத்து விமான வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சிறந்த சேவை மற்றும் தியாகம் நமது வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் விமானப்படை தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன.
- விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ‘எச்.டி.டி.-40’ என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப்படை அடியெடுத்து வைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் கடந்த அக். 6-ந்தேதி மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டு களித்தனர்.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படை பிரிவின் கீழ் செயல்படும் பாராசூட் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 5 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அதற்கு அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் மெரினா கடற்கரை மணல் பகுதியில் குதித்தனர். அங்கு தேசவிரோத சக்தியால் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை மீட்கும் சாகச நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு சாகச நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.
இதில், விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி 'ஸ்கை டைவிங்' கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் நடைபெற்றது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட 'டகோட்டா' மற்றும் 'ஹார்வர்ட்' ஆகிய பழங்கால விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம், கார்கில் போரில் பங்கேற்ற விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வானில் சாகசத்தை வெளிப்படுத்தின.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 'சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்து அசத்தினர். அடுத்ததாக, இந்திய விமானப்படையில் அதிவேகமாக செல்லும் போர் விமானமான ரபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுக்க செய்தது.
இந்திய விமானப்படையின் பழமையான விமானமான 'டகோட்டா', 'ஹார்வர்டு' விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்தவகை விமானங்களில் 1947-ம் ஆண்டில் இருந்து 1989-ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றின. பழமையான விமானம் தாழ்வாக பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது, வர்ணணையாளர்கள், என்னதான் வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவில்லை' என்றதும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள 'எச்.டி.டி.-40' என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. மிராஜ் போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன் இதய வடிவை வானில் வரைந்து காண்பித்தது வேறுவிதமாக அமைந்தது.

சென்னையை கலக்கிய விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எச்.அசுதானி, கூறும்போது, 'சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் தாம்பரம் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய 7 இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சாகசத்தில் ஈடுபட்டன. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது' என்றார்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 மணி நேரம் நடந்த விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் மாவட்டம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுமார் 15 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் உலகிலேயே அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதற்காக நிகழ்ச்சி முடிவடைந்ததும், லிம்கா புத்தகத்திற்கு அனுப்புவதற்காக கழுகு பார்வையில் ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்களை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த குடை, குடிநீர் பாட்டில்களால் அசைத்து ஆரவாரம் செய்தனர்.
சென்னை மெரினாவில் விமான சாகசத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- விமானங்கள், நெருக்கமாக சீறிப் பாய்ந்து பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.
- விமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாம்பரம்:
இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சுகோய் 30 ரக போர் விமானம், சூ-30 ரக விமானம், போர் ஜெட் விமானம் உள்பட பல்வேறு வகையான விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் சீறி பாய்ந்து சென்று சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

முன்னதாக விமானப்படையின் மெக்கானிக்கல் பிரிவு பயிற்சியாளர்கள், வான்வீரர் பயிற்சிக் குழுவினர் பங்கேற்று தற்காப்பு கலை, உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவை செய்து காட்டினர். பத்து வகையான விமானங்கள் இடம் பெற்ற கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விமானப்படை தினத்தில் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தேசத்தைப் பாதுகாத்துள்ளனர் மற்றும் பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.






