search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold robbery"

    • தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்பெங்களூரு சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் 5 கிலோ கொள்ளை சம்பவம் நடந்தது. கோவையை சேர்ந்த பிரசன்னா என்பவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தி்ல் தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் கோவை ராஜவீதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு பெங்களூரில் 5 கிலோ தங்க நகைகள் வாங்கி கொண்டு கார் ஒன்றில் தருமபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது, காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தங்கம் எடுத்து வந்தவர்களை தாக்கி விட்டு காருடன் தங்கத்தை கடத்தி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த 4 பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.

    இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரி்ல் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரைண நடந்து வருகிறது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தருமபுரி-சென்னை ரோட்டில் திப்பப்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையிலுள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாடி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில், தங்கம் எடுத்து வரப்பட்ட கார் கடத்தலில் ஈடுபட்டவர்களின் கார் பதிவெண்களின் விபரம் எதாவது கிடைக்கிறதா? என்பது குறித்தும் காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களில் கார்கள் பயணித்தது பதிவாகியிருக்கிறதா? என்பதும் குறித்தும் தனிப்படை சோதனை செய்து வருகிறது.

    இந்நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். 

    • பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன
    • நகை திருட்டு தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    சென்னை:

    காசிமேடு, ஒய்.எம்.சி.ஏ. குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். நேற்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மாடியில் குடும்பத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
    • அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    திருச்சி :

    திருச்சி ஏர்போர்ட் அன்பு நகர், அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் (வயது 29). இவர் திருச்சியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது வழக்கம். இவரது வீட்டின் அருகில் இவரது தாத்தா சுப்பிரமணியன் (65) ஓய்வு பெற்ற ரயில்வே பரிசோதனராக பணிபுரிந்து வந்தவரின் வீடு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மாலை சுமார் 5 மணியளவில் நித்திஷின் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாத்தா சுப்பிரமணியன், வீட்டின் உள் நுழைவதற்கு முற்பட்டபோது, அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதி வுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    மதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை சத்யசாய் நகரில் உள்ள ரோஜா வீதியை சேர்ந்தவர் வீரபாண்டி.இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது30), இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தினமும் மதுரையில் இருந்து பஸ்சில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று காலை லட்சுமி பிரபா எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டார். புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று லட்சுமி பிரபாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.

    இதுகுறித்து புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

    கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார். #GoldRobbery
    பெரம்பூர்:

    கொருக்குப்பேட்டை உள்ளார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வரும் இவர் வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் வீட்டில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்ஸ்ராஜ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இருவரையும் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ரெயிலில் செல்வது தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார், ஆந்திர ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்ற நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதை தெரிந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில் அங்கு வந்ததும் அதில் இருந்து இறங்கிய அன்ஸ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்கமும் 120 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்ஸ்ராஜுடன் இருந்த அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

    இதுபற்றி சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் அன்ஸ்ராஜை பிடிப்பதற்காக விஜயவாடா விரைந்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #GoldRobbery
    சித்தூர் அருகே பேருந்தில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தது குறித்து 7 பேரை கைது செய்த போலீசார் 4 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    மும்பையைச் சேர்ந்தவர் தங்க நகை மொத்த வியாபாரி பாவேஷ், தனது ஊழியர்கள் 2 பேரிடம் 15 கிலோ தங்க நகைகளை விற்பனைக்காக கடந்த 8ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் அவற்றை விசாகப்பட்டினத்தில் பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு சென்றார்.

    ஆந்திர மாநிலம். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் நகைப்பைகளில் 9 கிலோ எடை கொண்ட பை ஒன்று மாயமாகியுள்ளது.

    இதானல் அதிர்ச்சியடைந்த அவர்கள், பங்காருபாளையம் போலீஸ் ஸ்டே‌ஷனில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், 10 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதன் ஒருபகுதியாக பெங்களுர், மும்பை, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற போலீசார், நகை கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் சம்பவம் நடந்த இடத்ததை பார்வையிட்டு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நகைபையை கும்பல் ஒன்று கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    அதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தொடர் விசாரணை மோற்கொண்டதில், அந்த கும்பல் பலமனேர் பகுதியில் அறை எடுத்து பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த கும்பலின் தலைவான சிந்துகூடம் பாசுகாலே உள்பட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேரை அதிராடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.

    ரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    மதுரையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில் தூங்கிய திருடர்கள் 6 பவுன் நகையுடன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை:

    மதுரை உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது31). இவர் மேலூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று உதயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பால்கனி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் அந்த கும்பல் வீட்டில் உள்ள பல அறைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் நகைகள் சிக்கவில்லை. இறுதியாக மறைவான இடத்தில் 6 பவுன் நகை இருந்தது. அதை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் களைப்பில் வீட்டிலேயே தூங்கி விட்டனர்.

    சிறிது நேரத்தில் உதயகுமாரின் மனைவி தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்குள் வந்தார் அப்போது மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருப்பதை கண்ட அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    இந்த சத்தத்தை கேட்டு எழுந்த திருடர்கள் அவசர அவசரமாக உதயகுமாரின் மனைவியை தள்ளி விட்டு நகையுடன் அங்கிருந்து தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் தவறி விழுந்து நகை வியாபாரி பலியான வழக்கில் மேலும் 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி ரங்கநாதன் கடந்த மாதம் 25-ந்தேதி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் சிக்கி பலியானார்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 கொள்ளையர்களை விரட்டிச் சென்ற போது அவர் தவறி விழுந்து உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் வீரகுமார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்தார்.

    அப்போது ரங்கநாதனிடம் ½ கிலோ தங்கம், கொள்ளையடிக்கப்பட்டதும், இந்த நகையுடன் தப்பிச் சென்றவர்களை விரட்டியபோது தான் அவர் கீழே விழுந்து பலியானதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த வழிப்பறியில் 9 பேர் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பாக மகேந்திரன், ஆனந்த், முகமது, மம்முட்டியான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நூர் முகமது, பீட்டர், முகமது ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஸ்பென்சர்குமார், இம்ரான் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் ஸ்பென்சர் குமாரிடம் தான் ½ கிலோ நகையும் இருப்பதாக கூறப்படுகிறது. 2 பேரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து பலியான நகை வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் திருச்சியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து ரெயிலில் சென்னை எழும்பூர் வருவார்.

    எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ரெயிலை விட்டு இறங்கியவுடன் தனது ஸ்கூட்டரில் ஏறி சவுகார்பேட்டைக்குச் செல்வார். தனது நகைப்பட்டறையில் செய்த தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்.

    அந்த நகைகளுக்கு பதிலாக தங்க கட்டிகளையோ அல்லது ரொக்கப்பணமாகவோ வாங்கிக் கொள்வார். வழக்கம்போல கடந்த மாதம் 24-ந் தேதி அன்று ரெங்கராஜன் சென்னை வந்தார். தான் கொண்டுவந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடைகளுக்கு சப்ளை செய்தார்.

    25-ந் தேதி அன்று இரவு அவர் மீண்டும் திருச்சி புறப்பட்டார். எழும்பூரில் ரெயில் ஏறுவதற்காக தனது ஸ்கூட்டரில் சவுகார்பேட்டையில் இருந்து ரெங்கராஜன் வந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 10.30 மணி அளவில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே. சம்பத் சாலையில் வந்தார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறும்போது, அவரது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. ரெங்கராஜனும் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே ரெங்கராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ரெங்கராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வைத்திருந்த ½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சில மர்மநபர்கள் கொள்ளையடித்ததாகவும், அந்த மர்ம நபர்களை ரெங்கராஜன் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அல்லது தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரெங்கராஜனின் உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

    கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் சார்லஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், சித்தார்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரெங்கராஜன் சவுகார்பேட்டையில் இருந்து புறப்பட்டபோது, அவருடன் மகேந்தர் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். மகேந்தர் சவுகார்பேட்டை நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர் ஆவார். சூளை பகுதியில் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிவிட்டார்.

    அதன்பிறகு ரெங்கராஜன் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் வந்துள்ளார். சூளை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். வாலிபர் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கியபிறகு ரெங்கராஜனை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

    வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சியிலும் அதே 4 பேரும் ரெங்கராஜன் வந்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட 4 பேர் மீதும், வாலிபர் மகேந்தர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகேந்தரை பிடித்து விசாரித்தார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்களை மகேந்தர் வெளியிட்டார்.

    ரெங்கராஜனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கொள்ளை ஆசாமிகள் என்று தெரியவந்தது. வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் மகாவீர் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆசாமிகளும் ரெங்கராஜனை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

    அவர் வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரெங்கராஜன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து ரெங்கராஜன் பலியாகியிருக்கிறார்.

    இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக வாலிபர் மகேந்தர்தான் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ரெங்கராஜன் தங்க கட்டிகள் கொண்டு செல்லும் தகவலை அவர்தான் கொள்ளை கும்பலுக்கு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் வாலிபர் மகேந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலின்பேரில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மம்முட்டியான் என்ற ராஜ்குமார் (32), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (28), ஆனந்த் (28) ஆகியோரையும் வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் இம்ரான், நூரு, பீட்டர், ‘ஸ்பென்சர்’ ரகுமான் ஆகிய மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இம்ரான்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் கொள்ளை திட்டத்தை வகுத்துக்கொடுத்து கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகள் இம்ரானிடம் இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த தங்க கட்டிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக ரொக்கப்பணமாக எங்களுக்கு கூலியாக கொடுத்தார் என்று இம்ரானை பற்றி கைதானவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இம்ரான் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருநாவலூரில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 30). விவசாயி. இவரது மனைவி சாந்தி(23). இவர்கள் 2 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர்.

    இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்தநிலையில் திருவிழா முடிந்தவுடன் கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும், வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சாந்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சாந்தியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×