search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து  தங்கம் -வெள்ளி கொள்ளை
    X

    திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் -வெள்ளி கொள்ளை

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
    • அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    திருச்சி :

    திருச்சி ஏர்போர்ட் அன்பு நகர், அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் (வயது 29). இவர் திருச்சியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது வழக்கம். இவரது வீட்டின் அருகில் இவரது தாத்தா சுப்பிரமணியன் (65) ஓய்வு பெற்ற ரயில்வே பரிசோதனராக பணிபுரிந்து வந்தவரின் வீடு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மாலை சுமார் 5 மணியளவில் நித்திஷின் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாத்தா சுப்பிரமணியன், வீட்டின் உள் நுழைவதற்கு முற்பட்டபோது, அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதி வுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×