search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 கிலோ தங்கம் கொள்ளை: தனிப்படை அமைப்பு கொள்ளையர்களை பிடிக்க 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டை- கார் சிக்கியது
    X

    கொல்லபுரி பகுதியில் கொள்ளையர்கள் விட்டு சென்றுள்ள காரை படத்தில் காணலாம்.

    5 கிலோ தங்கம் கொள்ளை: தனிப்படை அமைப்பு கொள்ளையர்களை பிடிக்க 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டை- கார் சிக்கியது

    • தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்பெங்களூரு சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் 5 கிலோ கொள்ளை சம்பவம் நடந்தது. கோவையை சேர்ந்த பிரசன்னா என்பவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தி்ல் தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் கோவை ராஜவீதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு பெங்களூரில் 5 கிலோ தங்க நகைகள் வாங்கி கொண்டு கார் ஒன்றில் தருமபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது, காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தங்கம் எடுத்து வந்தவர்களை தாக்கி விட்டு காருடன் தங்கத்தை கடத்தி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த 4 பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.

    இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரி்ல் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரைண நடந்து வருகிறது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தருமபுரி-சென்னை ரோட்டில் திப்பப்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையிலுள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாடி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில், தங்கம் எடுத்து வரப்பட்ட கார் கடத்தலில் ஈடுபட்டவர்களின் கார் பதிவெண்களின் விபரம் எதாவது கிடைக்கிறதா? என்பது குறித்தும் காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களில் கார்கள் பயணித்தது பதிவாகியிருக்கிறதா? என்பதும் குறித்தும் தனிப்படை சோதனை செய்து வருகிறது.

    இந்நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    Next Story
    ×