என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசிமேட்டில் வீட்டுக்குள் புகுந்து 27 பவுன் நகை திருட்டு
    X

    காசிமேட்டில் வீட்டுக்குள் புகுந்து 27 பவுன் நகை திருட்டு

    • பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன
    • நகை திருட்டு தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    சென்னை:

    காசிமேடு, ஒய்.எம்.சி.ஏ. குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். நேற்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மாடியில் குடும்பத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    Next Story
    ×