search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் சூட்டுபொத்தையில்  109-வது குருபூஜை தேர் திருவிழா - 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    வள்ளியூர் சூட்டுபொத்தையில் 109-வது குருபூஜை தேர் திருவிழா - 29-ந்தேதி தொடங்குகிறது

    • முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
    • திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

    வள்ளியூர்:

    வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வா ய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.

    சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வருவார்கள். இந்த தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் விசேட அன்னதானம் வழங்கப்படுகிறது. 4-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 6-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறும். 7-ந்தேதி குருஜெயந்தி, 8-ந்தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம், அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அடியவர்களுக்கு விசேட அன்னதானம் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×