search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GURUPUJA"

    • மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாணிக்கவாசகரின் சிறப்புகள் குறித்து முத்துச்சாமி, தனலட்சுமி பக்தி சொற்பொழிவு ஆற்றினர்.

    மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பஞ்ச வாத்தியங்கள், சங்க நாதம் முழங்கி, திருவாசகம் பாடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
    • திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

    வள்ளியூர்:

    வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வா ய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.

    சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வருவார்கள். இந்த தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் விசேட அன்னதானம் வழங்கப்படுகிறது. 4-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 6-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறும். 7-ந்தேதி குருஜெயந்தி, 8-ந்தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம், அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அடியவர்களுக்கு விசேட அன்னதானம் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அரியலூர்:

    தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், பால்குடம் மற்றும் அன்னபடையல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, அமுதபடையல் இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதி நடந்தது.

    ×