மாணிக்கவாசகர் குருபூஜை

மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மாணிக்கவாசகர் குருபூஜை
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாணிக்கவாசகரின் சிறப்புகள் குறித்து முத்துச்சாமி, தனலட்சுமி பக்தி சொற்பொழிவு ஆற்றினர்.

மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பஞ்ச வாத்தியங்கள், சங்க நாதம் முழங்கி, திருவாசகம் பாடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com