search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் மாசி திருவிழா
    X

    அய்யாவின் அருளிசை வழிபாடு புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்ற காட்சி.

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் மாசி திருவிழா

    • 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடி மற்றும் பால்தர்மமும், மாலை 5 மணிக்கு சுவாமிதோப்பில் இருந்து முந்திரி பதம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்துவருதல், நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடு அய்யாவின் அருளிசை புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    Next Story
    ×