search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayya Vaigundar"

    • இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது.
    • 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது.

    இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19-ம் தேதி இரவு அய்யாவழி மக்கள், அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதாரக் காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.

    மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள், அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்ச்சியிலும், பிறகு சாமிதோப்பு தலைமைபதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அய்யா வைகுண்டர் அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.

    கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடி மற்றும் பால்தர்மமும், மாலை 5 மணிக்கு சுவாமிதோப்பில் இருந்து முந்திரி பதம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்துவருதல், நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடு அய்யாவின் அருளிசை புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம் நடைபெறும்.

    கல்லிடை:

    அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் சப்பர பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் நாளான 10-ந் தேதியன்று காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும்.

    11-ந் தேதி அதிகாலை அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம், சந்தனக்குடம் எடுத்தல், கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெறும். 13-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை வாகைக்கு ளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.

    ×