search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vagaipathi"

    • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது.
    • 8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம்,பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷபம் ஆகிய வாகனங்களில் சப்பர பவனியும், தொடர்ந்து 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம், அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது.

    8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல், கும்பிட்டு நமஸ்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக 11-ம் திருநாள், 25வது ஆண்டு தேர் திருநாள், 50-வது தேர் பவனி மாலை 4 மணிக்கு செண்டை மேளம், நையாண்டி மேளங்கள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஏராளமான அன்பு கொடிமக்களும், வாகைபதி அன்பர்களும் அய்யா வழி அன்புக்கொடி மக்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனி வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

    • வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம் நடைபெறும்.

    கல்லிடை:

    அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் சப்பர பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் நாளான 10-ந் தேதியன்று காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும்.

    11-ந் தேதி அதிகாலை அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம், சந்தனக்குடம் எடுத்தல், கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெறும். 13-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை வாகைக்கு ளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.

    ×